*நீங்காத நினைவுகள்* #தெரிந்து கொள்ளுங்கள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩
*அறிஞர் அண்ணா போப்பாண்டவரைச் சந்திக்க* *ஒதுக்கப்பட்ட நேரம் வெறும் 5 நிமிடம் மட்டுமே.*
*"அஹிம்சா மூர்த்தி காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலமாம் தமிழ் நாட்டின் முதல்வர் நான்" என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா.*
*போப்பாண்டவர் சொன்னார், "அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்!"*
*தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து* "*"உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்" என்றார்.*
"*"என்ன கேட்டாலும் தருவீர்களா" என்று கேட்டார் அண்ணா.*
"*"கேளுங்கள் தருகிறேன்" என்றார் போப்பாண்டவர்.*
"*"போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மோகன் ரானடே இன்றைக்கும் போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார்.*
*உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகலிடம் பேசி மோகன் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும்" என்று கேட்டார் அண்ணா.*
*சரி என்று சொன்னார் போப்பாண்டவர். மகிழ்ச்சியோடு இந்தியா திரும்பினார் அண்ணா.*
*போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்யப்பட்ட ரானடே இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.*
*டெல்லி வந்த ரானடேவை வரவேற்க அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி விமானநிலையத்திற்குச் சென்றார்.*
*ரானடே அன்னை இந்திரா காந்தியிடம், "யாருக்காகப் போராடினேனோ அந்த கோவா மக்களே என்னை மறந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டிய திரு அண்ணாதுரை எங்கே" என்று கேட்டார்.*
"*"அண்ணா மறைந்து விட்டார், அவர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன்" என்று சொன்னார் அன்னை இந்திரா.*
*நாஞ்சிலாரைச் சந்தித்து விட்டு, "நீங்கள் மிகவும் நேசிக்கும் கோவாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன்" என்று சொன்னார் அன்னை இந்திரா.*
*உடைந்து போன ரானடே, "நான் முதலில் செல்ல வேண்டிய இடம் கோவா அல்ல, அண்ணாவின் சமாதி தான்" என்றார்.*
*அன்னை இந்திரா, ரானடே மற்றும் நாஞ்சிலாரை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தார்.*
*அண்ணா துயில் கொள்ளும் மெரினாவில் அழுது புரண்டான் ரானடே என்பது தமிழினம் மறந்த வரலாறு.*
*போப்பாண்டவரிடம் தனக்கென எதுவும் கேட்காமல் ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாந்தர் தான் அறிஞர் அண்ணா.*
இந்த பதிவு*
*அறிஞர் அண்ணா 92வது பிறந்தநாள் அன்று (15.09.2000) சென்னை வானோலி நிலயத்தில் இன்று ஒரு தகவல் சொல்லும் தென்கச்சி கோ. சுவாமினாதன் அவர்கள் இதனை தெரிவிதிதுள்ளார்.*
*முன்னாள் பிரதமர் நேரு அவர்களுடன் அண்ணாவை ஒப்பிட்டு ஒருவர் பேசும்போது குறிக்கிட்ட அண்ணா:*
*நேரு அவர்கள் கட்டி முடிக்கப்பட்ட உயர்ந்த கோபுரம்: நான் கொட்டிக்கிடக்கும் செங்கல்"* என்றார்.
*நன்றி*
*வாழ்க வளமுடன்*

