#Today Gospel
கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்? சங்கீதம் 15:1
மேலும் சங் 15: 2,3,4,5 சொன்ன வார்த்தையின் படி ஒரு மனுஷனும் வாழ முடியவில்லை. உண்மையில் மனுஷன் தன்னை சாத்தானிடமும், பாவத்திலும் இழந்து போனான்.
இழந்து போன யாவரையும் மீட்க இயேசுவின் இரத்தம் தேவைப்பட்டது. இரட்சிப்பு பெற்ற பின்னும் பாவத்தை செய்யாத படி எச்சரிக்கையாக இருப்போமாக. மேல் சொன்ன வசனத்தில் வட்டிக்கு விடுதல், இலஞ்சம் வாங்குதல் இன்னும் நம்மிடம் இருந்தால் அதை விட்டுட்டு சகேயுவைப் போல் திரும்ப கொடுத்தாலொழிய அதுவரையில் அவர்கள் வீட்டுக்கு இரட்சிப்பு வரவில்லை.
மேலும் அந்த பாவத்தில் நிலைத்திருந்தால் சிறுமைப்பட்டவர்கள், எளிமையானவர்கள் ஒடுக்கப்படுவார்கள். அதின் இரத்தப்பழி அவர்கள் குடும்பம் யாவரும் சுமப்பார்கள். Ref எசேக்கியேல் 22: 12, 13
நம்மிடம் ஒருவரும் இப்படி இருக்கலாகாது. எல்லா ஆசீர்வாதமும் தேவனிடத்திலிருந்து வந்தது அல்ல, இதை சோதித்து அறியுங்கள். சாத்தானும் அவனது சேனைகளும் பூமியைக் கூடாரமாக இருக்கும் படி தள்ளப்பட்டார்கள் வெளி 12:7, 8,9...ஆம் மனுஷன் வழிவிலகும் படி, சில பாவ ஆசீர்வாதங்களை கொடுத்து அவனிலே நிலைத்திருக்க செய்கிறான் லூக்கா 4 : 6.
00:18

