ShareChat
click to see wallet page
search
பொதுவாக பெருமாள் கோயிலுக்கு சென்றால் தான் நமக்கு துளசி தீர்த்தம் கொடுத்து தலையில் சடாரி வைத்து ஆசி வழங்குவார்கள் ஆனால் ஒரு சிவன் கோவிலில் பெருமாள் கோயில் நடைமுறையில் தீர்த்தமும் சடாரியும் வழங்கப்படுகிறது இந்த அதிசயம் நிகழும் இடம் சென்னை போரூரில் உள்ள அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயிலாகும் சீதையை தேடி சென்ற ராமர் இத்தலத்தில் லிங்க வடிவில் இருந்த சிவபெருமானை 42 நாட்கள் தவம் செய்து வழிபட்டார் சிவனை தனது குருவாக ஏற்று இராமர் வழிபட்டதால் இங்கே சிவபெருமானே குருவாக கருதப்படுகிறார் குருவான சிவபெருமானை வழிபட வந்த சீடரான ராமபிரானுக்கு மரியாதை செய்யும் விதமாக திருக்கோயிலில் இன்றும் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கி சடாரி வைத்து ஆசி வழங்கப்படுகிறது சைவமும் வைணவமும் இணையும் அற்புத தலமாகும் மிகச்சிறந்த ஒரு பரிகார தலமாகும் வியாழன் கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு பதில் இங்கு மூலவர் ராமநாதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன குரு தோஷம் உள்ளவர்கள் இங்குவந்து வழிபடுவது விசேஷம் இங்குள்ள இறைவனுக்கு திராட்சை மாலை சாத்தி வழிபடுவது மிகவும் பிரபலம் திருமண தடை உத்திர பாக்கிய தடை இவர்கள் நீங்கி திருமணம் புத்திர பாக்கியம் போன்றவை ஈசன் அருளால் கிடைக்கும் இங்குள்ள நவக்கிரகங்கள் அனைத்தும் தங்களது தேவியருடன் தம்பதி சகிதமாக காட்சி தருவது தரிசிக்க வேண்டிய ஒன்று சிவன் கோயிலில் பெருமாளுக்கு வழிபாட்டை நேரில் காணலாம் ராமபிரான் வழிபட்ட ஈசன் அவர்களை பெறவும் கோயிலுக்கு சென்று வழிபடுவது ஈசன் அருள் கிட்டும் காலை ஆறு மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும் #ஆன்மீகம்
ஆன்மீகம் - REDDIYUR AANMIGAM GAM சிலன்கோயிலில் வழங்கப்படும் சடாரி ஆசி மற்றும் தீர்த்தம் போரூரில் ஓர் ஆன்மீக அதிசயம்! REDDIYUR AANMIGAM GAM சிலன்கோயிலில் வழங்கப்படும் சடாரி ஆசி மற்றும் தீர்த்தம் போரூரில் ஓர் ஆன்மீக அதிசயம்! - ShareChat