MUTHUPANDIAN RAMKUMAR
#குலதெய்வம் #குலதெய்வம் #குலதெய்வம் #குலதெய்வம் #குலதெய்வம் சாபம் இருப்பதை என்பதை எப்படி தெரிந்து கொள்வது? அதை போக்க என்ன வழி....!?!?!?*
👁️👁️👁️👁️👁️
குலதெய்வ சாபம் என்றால் என்ன?
குலதெய்வத்தை வணங்க மறந்து விடுவதால் குலதெய்வத்தின் சாபம் அல்லது கோபம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் இருத்தல், அதை தெரிந்து கொள்ள முயற்சி கூட செய்யாமல் இருத்தல், பசுக்களை வதைப்பது, வயதான பெற்றோரை கவனிக்காமல் விடுவது, முன்னோர்களுக்கு அவர்கள் இறந்த பிறகு செய்ய வேண்டிய தர்ப்பணம், சிரார்த்தம் போன்றவற்றை செய்ய தவறுதல், குலதெய்வத்தை மறந்து விடுதல் போன்றவைகள் குலதெய்வ சாபம் ஏற்படுவதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
குலதெய்வ சாபத்தை தெரிந்து கொள்வது எப்படி?
குடும்பத்தில் தொடர் தடைகள், ஒற்றுமையின்மை மற்றும் வழிபாட்டுத் தவறுகள் ஏற்பட்டால் குலதெய்வத்தின் கோபம் அல்லது சாபம் இருக்கிறது என்று அர்த்தம். எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் எதிர்பாராத தாமதங்கள் மற்றும் ஏமாற்றங்கள் உண்டாகுதல், குடும்பத்தில் காரணமின்றி சண்டை, நிம்மதியற்ற சூழல் மற்றும் நோய்கள் தொடர்வது, குலதெய்வ கோயிலுக்குச் செல்ல முடியாத சூழ்நிலை அல்லது குலதெய்வம் எது என்றே தெரியாமல் போவது, வாரிசு உருவாகாமல் இருப்பது அல்லது திருமணத் தடைகள் நீடிப்பது ஆகியவை குலதெய்வம் சாபம் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும். ஜாதகத்தில் பித்ரு தோஷம் அல்லது குலதெய்வ ஸ்தானமான ஐந்தாம் இடம் மற்றும் சனி கிரக நிலைகளைக் கொண்டும் குலதெய்வ சாபம் இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.
குலதெய்வம் சாபம் தீர என்ன செய்யலாம்?
குலதெய்வத்திற்கு வேண்டிக் கொண்ட நேர்த்திக்கடனை மறந்து விட்டாலும் அல்லது செய்ய தவறி விட்டாலும் குலதெய்வம் சாபம் ஏற்படலாம். அதனை எளிதாக நிவர்த்தி செய்து கொள்ள சில எளிய பரிகாரங்களை செய்வதால் குலதெய்வத்தின் சாபத்தில் இருந்து விடுபட்டு, குலதெய்வத்தின் அருளை பெற முடியும்.
பூஜை அறைக்கு முன்பாக நின்று, குலதெய்வத்தை மனதார நினைத்து, நேர்த்திக்கடனை தவறாமல் வந்து செலுத்தி விடுகிறோம். ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள் என்று மனதார வேண்டிக் கொண்டு, ஒரு சுத்தமான மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்துடன் சிறிதளவு பச்சை கற்பூரத்தை சேர்த்து முடிந்து, அதை குலதெய்வத்தின் படத்திற்கு முன்பு வைத்து விடுங்கள். இப்படி செய்வதால் குலதெய்வ சாபம் நீங்கி, வளம் பெறலாம். விரைவிலேயே உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது, குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடனுடன் இந்த காணிக்கையையும் சேர்த்து, குலதெய்வம் கோவிலில் செலுத்தி விடுங்கள்.
மற்றொரு பரிகாரமாக பூஜை அறையை அலங்காரம் செய்து விட்டு, குலதெய்வ திரு புருவப்படத்தின் முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் வைத்து, ஒரு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். ஒரு தாம்பூல தட்டில், ஒரு மஞ்சள் துணியின் மேல் ஒரு கைப்பிடி அளவு சில்லறை காசுகளை வைத்து முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள்.
பிறகு உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை 27 முறை உச்சரிக்க வேண்டும். அடுத்து குலதெய்வ சாபம் நீங்குவதற்கு சித்தர்களால் அருளப்பட்ட ஒரு மந்திரம் இருக்கிறது. அதை 108 முறை மணமுருகி சொல்லுங்கள். குலதெய்வத்தை வீட்டிற்குள் வர வைக்கும், குலதெய்வத்தின் கோபத்தை தணிக்கும் அந்த மந்திரம்…
“ஓம் என் குலதெய்வமே வர வர
ஓம் வம் வம் உம் உம்,
என் படியேறி வா வா என் குல தெய்வமே”
இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு கற்பூர ஆரத்தி காண்பித்து, பூஜையை நிறைவு செய்ய வேண்டும். வீட்டில் எடுத்து வைத்திருக்கும் சில்லறை காசு முடிச்சை அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள். நீங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போது அதை கொண்டு போய் குலதெய்வ கோவிலில் உண்டியலில் செலுத்தி விடுங்கள். மேல் சொன்ன விஷயத்தை நம்பிக்கையோடு செய்தால் குலதெய்வத்தின் கோபம் குறைந்து, குலதெய்வ சாபம் நீங்கும்.
தெரிந்து கொள்ளுங்கள்...
🙏🏻😟🙏🏻😟🙏🏻