#📺அரசியல் 360🔴 #💪தி.மு.க கடலூர் மேற்கு மாவட்டம், நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியம், பேய்கானத்தம் சிவனந்திபுரம் அப்பியம்பேட்டை கோரணப்பட்டு சிவநந்திபுரம் கோ-சத்திரம் நெய்வேலி வட்டம் 21 உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த பாமக, அதிமுக, தவெக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர், கமல்ராஜ், ஆனந்தராஜ், சந்திரசேகரன், நெய்வேலி வட்டம் 21 பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையையும், துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலையும் ஏற்று, நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் திருமிகு. சபா.இராசேந்திரன் அவர்கள் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.
நெய்வேலி ஆர்ச் கேட் அருகே உள்ள ஸ்ரீராம் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பண்ருட்டி ஒன்றிய பெருந்தலைவர் சபா.பாலமுருகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் க. அறிவழகன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், ஒன்றிய அவைத் தலைவர்கள் வீர.ராமச்சந்திரன் v.ராஜா, k.சாரங்கபாணி, நடராஜன் ராம.வெங்கடேசன் GR.ஆடலரசன் கோவிந்தராஜ், மாவட்ட ஜனார்த்தனன் மோகன், சடையப்பன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் ராஜேஷ், நகர இளைஞரணி செயலாளர் ஸ்டாலின், லோகநாதன், தனசேகர், பொன்னம்பலம், வழக்கறிஞர் ஹரிதாஸ், சந்திரசேகரன், அண்ணாதுரை, ஆறுமுகம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வு திமுகவின் வளர்ச்சியையும், மக்கள் நலத் திட்டங்களின் மீதான நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது. ஸ்டாலின் தொடரட்டும்....
தமிழ்நாடு வெல்லட்டும்....


