ஸ்ரீராமநவமிக்கான என் விரதம் முதல் மூன்று நாட்கள் வெற்றி; நான்காவது நாள் காட்டழகிய சிங்கர் கோவிலுக்கு சென்று வந்தேன்; ஏதோ பயங்கர டார்ச்சர் பற்றிக் கொண்டு விட்டது. அடுத்த நாள் அந்த தலை டார்ச்சரால் காய்ச்சல், சளி என்று 3 நாட்கள் விரதம் இருந்த தடயமே இல்லாமல் உருக்குலைத்து விட்டது. ஆகையால், ராமநவமி வழிபட கூட முடியவில்லை (கோபத்தில் விருப்பமும் இல்லை - ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் ஒன்று ஸ்ரீரங்கத்தில் இருந்தது. அதற்கும் போகவில்லை). ஸ்ரீராமர் ரிஷிகளின் தவத்தை காப்பவர். நான் சனாதன ரிஷி அளவுக்கு பெரிய ஆள் இல்லையாகையால் என் தவத்தை காப்பாற்ற அவர் முயலவில்லை போலும்!!😄 ********************************************** எனக்கு இது மாதிரி டார்ச்சர் வருவது 15 வருடங்களாக நடக்கிறது; ஆனால், இந்த முறை மிக அதிகம். வழக்கமாக காமத்தில் விழுவது பற்றிய கர்மம் இப்படி டார்ச்சராக வருகிறது என்று மேலும் காமத்திற்கு எதிராக இருப்பேன். ஆனால், இது விரதம் இருப்பதற்கே எதிராகவோ என்று கூட குழப்பத்தில் தோன்றியது; அப்படியிருக்க வாய்ப்பில்லை என்று தான் நினைக்கிறேன். ஆனால் , அப்படிப்பட்ட காரணம் உண்மையானால் இதை மிக சீரியஸாக எடுத்துக் கொண்டு, நாத்திகத்தை முற்றிலுமாக வேறறுக்க வேண்டிய காலகட்டம் வந்து விட்டது என்று நினைக்கிறேன். தமிழகத்தில் சற்று பாஜக, சனாதனம் வந்தாலும் பரவாயில்லை; இத்தகைய கடவுளுக்கு எதிரான நாத்திகத்தை நாம் முற்றிலும் விலக்க வேண்டும். என் வாழ்க்கை அனுபவத்தில் கூறுகிறேன். மேலும், இன்று ஒரு பிரயாண விலாக் ஒன்று பார்த்தேன் - https://youtu.be/RrR33NVoChQ?si=0v9qHZ1D7uGOoz5K
- அதனால் கம்போடியாவில் நடந்த இனப்படுகொலை பற்றி விவரமாக படிக்க நேர்ந்தது - மிக மிக மிக மிக மிக மிக மிக கொடூரம் - எதனால்?! ஏழைகளின் வாழ்வு; கம்யூனிசம்; சோசியலிஸம் என்ற பெயரால்!!! ஆனால், உண்மையை ஆராய்ந்தால் அது கடவுளுக்கு எதிரான சக்தியால் என்று எளிதாக கூறலாம்!! நாத்திகம் ஓரளவிற்கு மேல் சென்றால், இப்படிப்பட்ட கொடூரங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது!! ஆகையால் சனாதனம் கூட பரவாயில்லை; பிஜேபி பரவாயில்லை; கடவுளுக்கு எதிரான நாத்திகத்தை அறவே ஒழிக்க வேண்டும். ************************************************ சரி, எழுத வந்த விஷயத்திற்கு வருகிறேன். பல காலம் ஸ்ரீராமரை பிரத்யேகமாக (exclusively) ஒரு 15-20 நாட்கள் வழிபட வேண்டும் என்று தோன்றுவதுண்டு. ஆகையால் தான் ரொம்ப பிளான் பண்ணி (அந்த நேரம் பார்த்து அம்மாவுக்கு உடல்நிலை வேறு சரியில்லை) பத்ராசலம் சென்று அங்கே ஒரு வாரமாவது தங்கி தினமும் விரதம் கோவில் என்று இருக்க வேண்டும் என்று சில வருடங்களுக்கு முன்பு சென்றேன். ஆனால், ஏனோ இரண்டு நாட்களில் திரும்பி விட்டேன். அதேபோல் ஸ்ரீராமரை மும்மூர்த்திகளில் முதல்வராக வழிபட வேண்டும் என்று (அவருக்கோ) யாருக்கோ பல நாள் ஆசை!!😄 பத்ராசலம் செல்ல பல காலம் ஆசை கொண்டிருந்த நான், இந்த விஷயம் ஒரு முறை பூஜா நேரத்தில் தோன்றிய போது உடனே மறுத்து விட்டேன். என்ன தான் எனக்கு ராமபக்தி இருந்தாலும் என் பூஜையறையில் சிவபெருமானுக்கு தான் முதலிடம்; ராமரை நடுநாயகமாக வைத்து வணங்க முடியாது என்று கூறிவிட்டேன்!! 😄😂 (ஆனால் , ராமர் விடவில்லை; என்றாவது ஒரு நாள் இவனுக்கு என் பெருமை பற்றிய உண்மை தெரியவரும் என்று நினைக்கிறார் போலிருக்கிறது!! 😄😂) *********************************************** ஒரு முறை இந்த எண்ணம் மீண்டும் தோன்றிய போது, நான் அதிகம் யோசிக்கக் கூட இல்லை; உடனே "ராமரால் எப்படி உலகை ஆள முடியும்?! அவர் உத்தம குணத்திலும், சாத்வீகத்திலும் உயர்ந்து தோய்ந்தவர்; அவரால் இந்த உலகை ஆளவெல்லாம் முடியாது; உலகை ஆள்வதென்றால் சிவபெருமான் போல் பலபடி மக்களுக்காக கீழே இறங்கி வர வேண்டியிருக்கும்; அது அவருக்கு ஒத்து வராது" என்று கூறிவிட்டேன். உடனே, "ராமரை பற்றி நீ என்ன நினைத்தாய்?! ரிஷிகளின் தவத்தை காப்பாற்ற அம்பு விட்டவர்; தீமையை எதிர்க்க அவர் தயங்குவதில்லை.." என்றெல்லாம் பதில் தோன்றியது!! ஆகையால் தான் இப்போது தோன்றியது - ஏன் என் தவத்தை காப்பாற்ற எதுவும் செய்யவில்லை?!😄😂 சரி, அவர் தான் சனாதன ரிஷிகளின் பங்காளன்; நம்முடைய அந்த "ஏழை பங்காளன்" அவன் எங்கே போனான்?! ஆம், எனக்கும் தான் தெரியவில்லை!! அவன் எங்கே போனான்?! (ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்திற்கோ?!) ஸ்ரீராமரை வழிபட்டால் வரமாட்டான் என்றால் பிறகு எதற்கு சிதம்பரத்தில் பெருமாள் சன்னதி?! **********************
#ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம


