ShareChat
click to see wallet page
search
*🌻காலை ஜெபம்* #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன்என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?* *என் கடவுளே, நான் பகலில் மன்றாடுகின்றேன்; நீர் பதில் அளிப்பதில்லை, இரவிலும் மன்றாடுகின்றேன்; எனக்கு அமைதி கிடைப்பதில்லை.* *நீரோ தூயவராய் விளங்குகின்றீர்; இஸ்ரயேலின் புகழ்ச்சிக்கு உரியவராய் வீற்றிருக்கின்றீர்;* *எங்கள் மூதாதையர் உம்மில் நம்பிக்கை வைத்தனர்; அவர்கள் நம்பியதால் நீர் அவர்களை விடுவித்தீர்.* *உம்மை அவர்கள் வேண்டினார்கள்; விடுவிக்கப்பட்டார்கள்; உம்மை அவர்கள் நம்பினார்கள்; ஏமாற்றமடையவில்லை.* (திருப்பாடல்கள் 22:1-5) *அமைதியின் அரசராகிய இயேசுவே! கடவுளின் திருமகனே! எங்களை இரத்தம் சிந்தி மீட்டவரே! இரக்கத்தின் உறைவிடமே! அன்பின் உருவமே! தூய்மையின் தொடக்கமே, எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே! உமக்கே ஆராதனையும், புகழும், மாட்சியும் என்றென்றும் எப்பொழுதும்!* *இந்த காலை வேளையிலே உம்மை போற்றுகிறோம், உம்மோடு பேச வந்திருக்கும் எங்களை ஆசீர்வதித்தருளும்.* *இந்நாளில் எருசலேம் நகரின் உள்ளே, அரசரை போல் நீர் நுழைந்த போது நடந்த நிகழ்வுகளையும், அதே நேரத்தில் அதே எருசலேம் மக்கள் உம்மை, சிலுவை சாவுக்கு ஒப்புவித்ததையும் இப்போது நினைத்து பார்க்கிறோம். நாங்களும் அந்த மக்களை போலவே வாழ்கிறோம், பாவம் செய்யும்போது உம்மை சிலுவை சாவுக்கு ஒப்படைகின்றோம் என்பதை நாங்கள் உணர செய்தருளும்.* *ஆண்டவரே! அணுக முடியாத ஒளியில் வாழும் நீர், சாதாரண மனிதனாக பிறந்து, எங்களுக்காக தாமே பாடுகளை ஏற்று, எங்களை மீட்டு கொண்டீரே!* *உம் அன்பிற்கு இல்லை எல்லை, உமது இரக்கத்திர்க்கு முடிவும் இல்லை. இந்த இரக்கத்தின் கடலில் நாங்கள் மூழ்க செய்தருளும். எங்களை கைவிட்டு விடாதேயும் அப்பா. நாங்கள் உமது பிள்ளைகள், உமது மந்தையின் ஆடுகள், எங்களை நல் வழியில் நடத்தியருளும்.* *ஆண்டவரே! இந்த புனித வாரத்தில் நாங்கள் உம்மை முழுமையாக கண்டுணர செய்தருளும், உமது அன்பை முழுமையாக பெற, எங்கள் கல்லான இதயத்தை மாற்றியருளும், உமது மன்னிப்பை நாங்கள் பெற எங்களை தகுதி உள்ளவர்களாக மாற்றும்.* *இயேசுவே! இவ்வாறு எங்கள் வாழ்நாள் முழுவதும் நாங்கள், உண்மையின் வழி நடந்து, உனக்கு சான்று பகரும் பிள்ளைகளாக வாழ வரம் அருளும்.* *இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். ஆமென்.* - சகோதரி. ஐஜின் #அன்னை மரியே வாழ்க💒💐
⛪ வேளாங்கண்ணி சர்ச் - ShareChat