இராஜபாளையம் தொகுதியில் மார்ச்-8 தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு முதுகுடியிலுள்ள செயிண்ட் ஜோசப் இன்டர்நேஷ்னல் பள்ளியில் 1000 மகளிர்கள் சேர்ந்து வலிமை ஒற்றுமை மற்றும் அதிகாரமளிப்பைக் கொண்டாடும் மகளிர்களின் சின்னத்தை பிரதிபலிக்கும் உலக சாதனையை தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் Dr.ராணிஸ்ரீகுமார்.,MP அவர்கள் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் திரு S.தங்கப்பாண்டியன் அவர்கள் முன்னிலையில் நிகழ்த்தி சாதனைக்கான சான்றிதழ்களை பள்ளி நிர்வாகத்திடமும் வழங்கினார்கள். அதனைத்தொடர்ந்து பேசிய MLA அவர்கள், நேற்று வெளியான UPSC தேர்வில் இந்திய அளவில் தமிழ்நாட்டை சார்ந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்திய நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற ராஜேஷ்வரி என்ற பெண் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்து பெண்களுக்கெல்லாம் பெருமை சேர்த்துள்ளார் எனவும், இப்படி பெண் சமுதாயத்தை பெருமைமிகு சமுதாயமாக மாற்றிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதுமைப்பெண் திட்டம் நான் முதல்வன் திட்டம் மகளிர் உரிமைத்தொகை விடியல் பேருந்து திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் இத்திட்டங்கள் அனைத்தையும் பெண் பயன்படுத்தி வாழ்வில் மிகப்பெரிய வெற்றியை பெற வாழ்த்துக்கள் கூறினார்.
#DMKVirudhunagar #🧑 தி.மு.க

