ShareChat
click to see wallet page
search
#Today Gospel யோவேல் : கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். ( யோவேல் 2 : 31 ) இயேசு : அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். ( மத்தேயு 24 : 29 ) பேதுரு : கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 2 : 20 யோவான் : நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில் மூன்றிலொருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கும் சேதப்பட்டது, அவற்றவற்றில் மூன்றிலொருபங்கு இருளடைந்தது; பகலிலும் மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமற்போயிற்று, இரவிலும் அப்படியேயாயிற்று. ( வெளிப்படுத்தின விசேஷம் 8 : 12 ) இப்படியிருக்க நாம் பூமியிலே இருக்கும் கொஞ்ச காலத்தில் செய்ய வேண்டியது என்ன? எல்லா சூழ்நிலையிலும் தேவனுடைய இரக்கத்தை தக்க வைத்துக்கொள்ளுங்கள்! வேறொன்றும் நம்மை இந்த பாழ்க்கடிப்பிலிருந்து தப்புவியாது. "உங்கள் இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார் ( யோவேல் 2 : 13 )
Today Gospel - ShareChat
00:08