ShareChat
click to see wallet page
search
புரட்சித்தலைவி அம்மாவின் 78-வது பிறந்தநாள்: இளைஞர்களை கவர வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டத்தின் சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடு: ஆர்.கே. நகரில் பிப். 24, 25-ல் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள்: "திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்னும் ஒரே அமாவாசை தான்!" – அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் காட்டம்! சென்னை, பிப்.19:- (பிப்:24) புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் - மாபெரும் கிரிக்கெட் விளையாட்டு போட்டி குறித்து தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பாக பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆர்.கே.நகர் கிழக்கு, மேற்கு, தெற்கு, பகுதி கழக செயலாளர்கள் ஆர்.நித்தியானந்தம், எம்.என்.சீனிவாசபாலாஜி, சந்தனசிவா, பெரம்பூர் பகுதி கழக செயலாளர்கள் எஸ்.எம்.மாரிமுத்து, டிஒய்கே.செந்தில்குமார், இ.லட்சுமிநாராயணன், என்.எம்.பாஸ்கரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் பேசிய போது:- 2026 சட்டமன்றத் தேர்தல் திமுகவா, அதிமுகவா என தேர்தல் விவாத களம் தயாராகிறது. தேர்தல் ஆணையமும் விரைவில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட உள்ளது, அண்ணா தி.மு.க.வுக்கு இது ஒரு முக்கியமான தேர்தல் என்பதால் பாக பொறுப்பாளர்கள் பெறுப்புடன் செயல்பட வேண்டும். மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைய பூத் கமிட்டி கட்டமைப்பை உருவாக்கி தேர்தல் களப்பணிகளை மேற்க்கொள்ள வேண்டும். யார் வேட்பாளர் என்பது முக்கியமல்ல, 220 தொகுதியிலும் அண்ணா தி.மு.க. வேட்பாளராக கழக பொதுச்செயலாளர் எடப்பாடியாரே வேட்பாளர் என்ற எண்ணத்தில் தேர்தல் பணியாற்ற வேண்டும். நமது இலக்கு 2026 ல் அண்ணா தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்பதில் குறியாக செயல்பட வேண்டும். மக்கள் திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். இன்னும் ஒரே அமாவசை தான் உள்ளது. காலத்தின் நன்மைகளை கருது எடப்பாடியார் அறிவித்த தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிருக்கு ரூ.2,000. உரிமை தொகை, ஆண், பெண், இருவருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம், மூன்று இலவச எரிவாயு சிலிண்டர், ஏழைகளுக்கு விலையில்லா வீடு, உள்ளிட்ட திட்டங்களை வீடு, வீடாக சென்று தெருமுனை பிரசாரம், மற்றும் திண்ணை பிரச்சாரம் செய்து பரப்புரை செய்ய வேண்டும். மேலும் வருகிற பிப்ரவரி - 24 புரட்சித்தலைவி அம்மாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆர்.கே.நகரில் பிப்.24,25 ஆகி இருநாட்கள் மாபெரும் விளையாட்டு போட்டிகளை வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர்கள்- விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பிப்:24 ந்தேதி ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள துறைமுகம் பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள பாபு ஜெகஜீவன்ராம் விளையாட்டு மைதானத்தில் முழுக்க, முழுக்க முழுக்க இளைஞர்களுக்கான கிரிக்கெட், ஹாக்கி, கேரம், பேட்மிண்டன், கபடி, தற்காப்பு கலை பயிற்சி, உள்ளிட்ட மாபெரும் விளையாட்டு போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் பரிசாக ரூ.1- லட்சம், இரண்டாம் பரிசு, ரூ.50-ஆயிரம்,மூன்றாம் பரிசு ரூ.25-ஆயிரம், சிறந்த ஆட்ட நாயகன் விருதாக விலையுயர்ந்த புல்லட் பைக் வழங்கப்படும் என அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் அறிவித்துள்ளார். மேலும்அம்மா பிறந்த நாள் விழாவை நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என இவ்வாறு தெரிவித்தார். இதன் முன்னதாக கழக எம்ஜிஆர் மன்ற மாநில இணை செயலாளர் நேதாஜி கணேசன், சிறுபான்மை பிரிவு மாநில துணைச் செயலாளர் எம்.ஏ.சேவியர், வழக்கறிஞர் பிரிவு மாநில துணை செயலாளர் ஆர்.மதுரை வீரன், கழக பேச்சாளர் வண்ணை கணபதி ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர். இந்நிகழ்வில் ஸ்டீல் ரவிசந்திரன், நாகரத்தினம்ரவிராஜன், சுபா, ஏ.கணேசன், மா.ஜெயபிகாசம், ஜி.கிருஷ்ணவேணி, கே.செல்வராணி எஸ்.ஆர்.பாபு, ஐயப்பா எஸ்.வெங்கடேசன், , லட்சுமி, டி.டீ.ஜனார்த்தனன், நெல்லை கே.குமார், ஜெஸ்டின் பிரேம்குமார், கௌரிசங்கர், சா.முகேஷ், அ.செல்வராஜ், லயன் ஈ.சண்முகவினாயகம், எஸ்.சுயம்பு, கே.பி.கர்ணன், ஆர்.சிவகுமார், கே.எஸ்.மூர்த்தி, மாலா, மகேஷ்குமார், வி.எஸ்.புருஷோத்தமன், மக்கள் கே.மகேந்திரன், லிங்கேசன், கே.லோகு, அருண்பிரசாத், எஸ்.ஆர்.அன்பு, எம்.சீனிவாசன், ஏ.வினாயகமூர்த்தி, இபி.சேகர், நாகூர்மீரான், ஏ.கே.சந்திரசேகர், ஆர்.வேல்முருகன், பி.கோவிந்தராஜ், நரேஷ்குமார், மரக்கடை விஜி, இளவரசன், டி.பிரபாகரன், நிர்மல்குமார், மற்றும் பி.ஜே.பாஸ்கரன், லயன் ஜி.குமார், சியான் செந்தில், இரா.ஜெய்பால், பாசறை ஏ.எஸ்.ஹரிகிருஷ்ணன், வி.பொன்முடி, பெரம்பூர் சேகர், ராம்குமார், ஏ.ஆனந்த், டீ.வெங்கடேசன், வி.கோபிநாத், பிரேம்குமார், டி.பிராங்கிளின், மற்றும் ஆர்.கே.நகர் - பெரம்பூர் பகுதி மாவட்ட பிற அணி செயலாளர்கள், பொறுப்பாளர்கள் வட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்டோர் இருந்தனர். @BABU AIADMK @அதிமுக தொண்டன் @அதிமுக தேனி @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக #📺அரசியல் 360🔴 #✍️தமிழ் மன்றம் #🔷காங்கிரஸ் #✌️அ.தி.மு.க #💪தி.மு.க
📺அரசியல் 360🔴 - ன ன - ShareChat