நாளை 3.3. 2026 அன்று சந்திர கிரகணம் மாலை 3.30 க்கு ஆரம்பித்து மாலை 6.47 க்கு முடிவடைகிறது.
கர்ப்பிணி பெண்கள் வயது மூத்தோர்கள் உடல் நலிவுற்றோர் கிரகணம் முடியும் வரை வெளியில் வர கூடாது.
கவனமுடன் இருக்க வேண்டிய ராசிகள்:
மேஷம் , சிம்மம், கன்னி, தனுசு. கும்பம்
நட்சத்திரம் : மகம், பூரம், உத்திரம். பூராடம் பரணி
செய்ய கூடாதவை
மாமிசம் உண்ண கூடாது . 3.30 ல் இருந்து 6.30 வரை . உறக்கம் கூடாது
கிரகணம் முடிந்ததும் அவசியம் தலை ஸ்நானம செய்து விளக்கேற்ற வேண்டும்.
பரிகார மந்திரம்
இதை ஒரு பேப்பரில் எழுதி சட்டை பையில் வைத்து கொள்ளவும்
"இந்த்ரோ அனலோ யமோ ரிக்ஷோ வருணோ வாயு ரேவச்சம், குபேர , ஈசோக்னந்து இந்து உபரக உதவ்யதாம் மம" |
கிரகணம் முடியும் வரை ராகு கேது சந்திர பகவான் ஸ்லோகம் சொல்லவும். ஓம் நமோ நாராயணாய
நம நமச்சிவாய என உச்சரிப்பதும் நன்மை.
கிரகணம் நேரத்தில் ஜபம் செய்வது மனசுத்தி மற்றும் ஆன்மீக பலன் தரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. குறிப்பாக ராகு – கேது தோஷ நிவாரணம் மற்றும் மன அமைதிக்காக கீழே உள்ள ஸ்லோகங்கள் சொல்லப்படுகின்றன. ராகு பரிகார ஸ்லோகம்
அர்தகாயம் மகாவீர்யம்
சந்திராதித்ய விமர்தனம்
சிம்ஹிகாகர்ப சம்பூதம்
தம் ராகும் ப்ரணமாம்யஹம்
பலன்:
ராகு தோஷம் குறையும், பயம் மற்றும் மன கலக்கம் நீங்கும்.
கேது பரிகார ஸ்லோகம் :
பலாச புஷ்ப சங்காசம்
தாரகாக்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்
பலன்:
தடை நீக்கம், ஆன்மீக முன்னேற்றம்.
🌙 சந்திரன் ஸ்லோகம் (சந்திர கிரகணம் போது முக்கியம்) சொல்லவும்
ததிஷங்க துஷாராபம்
க்ஷீரோதார்ணவ சம்பவம்
நமாமி சசினம் சோமம்
சம்போர் மகுட பூஷணம்
பலன்:
மன அமைதி, உடல் நலம், குடும்ப சாந்தி.
மறுநாள் காலை அருகில் உள்ள சிவன் கோவில் சென்று வழிபட வேண்டும்
Savittri Raju💐
#சந்திர கிரகணம்


