ShareChat
click to see wallet page
search
சில வருடங்களுக்கு முன்பு சிவத்தை அடைந்தவர்களுக்கு நான் ஒரு உதாரண மாடலோ என்று நினைத்தேன். இன்றைக்கு நிலைமை தலைகீழ் - "ஆன்மீகத்திற்கு" விளக்கம் அளிப்பதற்கு பதில் "நாத்திகத்திற்கு" விளக்கம் அளிக்கப் போகிறேன்!! 😄. ************************************************** தொடர்ந்து 15 வருடங்களாக தலை மூளை எண்ணம் எல்லாம் டார்ச்சர் அனுபவித்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்?! உள்ளே இருக்கும் அனைத்தும் அழிந்து போகும். எனக்குள் இருந்த பக்தி கடவுள் elements எல்லாவற்றையும் தொடர்ந்து டார்ச்சர் செய்து அழித்தே விட்டார்கள். இப்போது உள்ளே "நானே" கூட இல்லை (ரோபாட்?!). அதாவது "அகத்தில்" இருந்த அனைத்தையும் "நாஸ்தி" செய்து விட்டார்கள். உள்ளே வெறும் "void" தான் இருக்கிறது. "நாஸ்தி" + "அகம்" = "நாத்திகம்". இப்போது நாத்திக உணர்வு தான் மேலிடுகிறது!! வெளியில் இருந்து பக்தியை புகுத்த வேண்டிய நிலை கூட வரலாம் போலிருக்கிறது!! ************************************************ எதனால் டார்ச்சர்?! இப்போது எல்லாரும் சிவனாக ஏற்றுக் கொண்ட ஒரு நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் என்று நினைக்கிறேன். (நாத்திகனானாலும் பரவாயில்லை; ஏற்றுக் கொள்ள முடியாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்). (இத்தனைக்கும் invisible entity - யாரென்று கூட தெரியாது!!). ஆன்மீகத்தின் ஆரம்பத்தில் பிராமணர்களை எதிர்த்ததால் பிராப்ளம். பிறகு அவர்கள் கர்மம் அவர்களுக்கு என்று விட்டு விட்டேன். பிறகு, கோவிலில் பாட்டு பாடினால் டார்ச்சர்; பிறகு துறவறத்தை ஏற்றுக் கொள்ளாததால் பிராப்ளம். பிறகு சனாதனத்தை எதிர்த்ததால் டார்ச்சர் (anti national). பிறகு ராமகிருஷ்ணரை, விவேகானந்தரை ஏற்றுக் கொள்ளவில்லை என்று பிராப்ளம். பிறகு யார் யாரையோ கடவுளாக ஏற்றுக் கொள்ள வில்லை என்பதால். தொடர்ந்து வரும் இந்த டார்ச்சர் "நாஸ்தி அகம்" ஆக்கும் என்பதால் காமத்திற்கு முதல் எதிரியாக இருந்த என்னை "காமத்தில் வைத்து" திணித்தார்கள். (அது பொய் - காமம் உள் அழிவை தடுக்கவில்லை). காமத்தை திணித்த அவர்களே பிறகு காமத்தில் விழுந்து விட்டு கோவிலுக்கு வருகிறேன் என்று கோவிலுக்கு சென்றால் கூட பெரும் டார்ச்சர்!! இப்போது எங்கே போனாலும் டார்ச்சர்!! பிராமணர்கள் அல்ல; வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தான் டார்ச்சருக்கு காரணம் (இல்லாவிட்டால் அவர்களுக்கு சனாதனத்தில் இடம் இல்லையோ?! உள்ளே விட மாட்டார்களோ?!) என்று தோன்றியதால் இஸ்லாம், கிறிஸ்துவம் என்று அவர்களையும் எதிர்க்க ஆரம்பித்து விட்டேன்!! இப்படி டார்ச்சர் ஒன்று தான் - ஆனால் விதவிதமாக காரணங்கள் (இப்படி கூட speculation: யாரோ ஒரு சிவன்/ கடவுள் நான் இறந்த பிறகு தான் "சிவன் போஸ்டை எடுத்துக் கொள்வேன்" என்று இருந்தானாம்; இன்று வரை என்னை கொல்ல முடியாததால், போஸ்டை இப்போது ஏற்றுக் கொண்டு விட்டானோ?! ஆனால், இது உண்மை: என்னைக் கொல்லவும் தொடர்ந்து முயற்சி நடக்கிறது; வேறு யார் யாரோ சாகிறார்கள் போல!!). முக்கியமான ஒன்று: இப்போது என்னை தண்ணி அடிக்க வைக்க (liquor drinking) பெரும் தூண்டுதல் நடைபெற்று வருகிறது!! எனக்கு இன்று வரை பழக்கம் கிடையாது (teetoller ). ************************************************* நான் இப்போது எழுதுவதை படித்து (மென்டலோ என்று!!😄 ) நான் முன்பு எழுதியதையெல்லாம் நம்பாமல் இருந்து விடாதீர்கள்!! மேலும், இந்த நிலை என் எதிரிகள் சிலர் அழியும் வரை மட்டும் இருக்கலாமோ என்னவோ!!). ************************************************* சில நாட்கள் முன்பு திருமூலர் முதல் தந்திரத்தில் எழுதிய "முப்பது உபதேசம்" முதல் சில பாடல்கள் படிக்க நேர்ந்தது. நான் "ஆஹா!! என்ன இது?! அப்படியே என் நிலையை பாடியிருக்கிறாரே!! சிவபெருமான் எனக்கு எவ்வளவு அருளியிருக்கிறான் என்றெல்லாம் கூட வியந்தேன்!!😄 (ஆனால் , அடுத்த நாளே டார்ச்சர் - மேற்கூறிய "நாஸ்தி அகம்" நிலைக்கு சென்று விட்டேன்!!😄😂) அதில் ஒரு அற்புதமான பாடல் - "பவளத்தில் சுடர் விடும் மாணிக்கத்தை பதிப்பான் நம் பெருமான்". இது ஒரு அற்புதமான விளக்கம். பவளம் என்பது crystal. அதற்கு சொந்தமாக எதுவும் கிடையாது. ஒளியும் கிடையாது. ஆகையால் அது தான் எதனை சார்ந்து இருக்கிறதோ அதை வெளிப்படுத்தும். உலகம் அல்லது கடவுள். இது மெய்கண்ட சைவம். ஆனால், அத்வைதம் என்ன கூறும் தெரியுமா?! அந்த பவளத்தில் ஒரு மாணிக்கம் இருக்கிறது - அது தான் ஆத்மன். மாணிக்கத்திற்கு இயற்கையான ஒளி உண்டா?! கிடையாது!! ஆனால், அத்வைதம் ஆத்மனுக்கு ஒளி உண்டு என்கிறது. என்னுடைய சைவ சித்தாந்தம் இயற்கையாகவே நம்முள் மாணிக்கம் உண்டு; ஆனால், அதன் ஒளியை தூண்ட சிவபெருமான் வேண்டும் என்கிறது (எங்கே அந்த சைவ சித்தாந்தம் எழுதப் பட்டுள்ளது என்று கேட்டால், அது என்னிடம் மட்டும் தான் இருக்கிறது!!!😄). ஆகையால், திருமூலரின் "பவளத்தில் ஒளி தரும் மாணிக்கத்தை பதிப்பான் சிவபெருமான்" என்று பாடியிருப்பது என் சைவ சித்தாந்த கருத்தை வலியுறுத்துவதால் சந்தோஷமாக இருந்தது!! ஆனால், எனக்குள் ஒளியை பதித்தானா?! மூன்று ஒளி இருக்கலாம் - ஞான ஒளி, ஆத்ம ஒளி மற்றும் சக்தி ஒளி - இவற்றில் ஞான ஒளி என் மாணிக்கத்தில் இருப்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் (ஆகையால் அவ்வளவு "அகம்" அவ்வளவு "நாஸ்தி" இல்லை!!😄). ஏன் எல்லாவற்றையும் முழு ஒளியையும் எம்பெருமான் தர மாட்டானா?! என்று கேட்டால் அதற்கும் பதிலை திருமூலர் தருகிறார் - அவரவர் தேவைக்கேற்ப அவன் விருப்பப்படி அருளுவான்!! (ஆகையால் சிலருக்கு எந்த ஒளியும் இல்லாத மாணிக்கமோ?!😄😂). இன்னும் மீதி பாடல்களை படிக்க வில்லை. அதற்குள் பெரும் டார்ச்சர் மற்றும் நாஸ்தி அகம்!! "**************************** #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
ஆன்மீக வாழ்க்கை - ஒளியா? பவள நாஸ்தி அகமா?! ஒளியா? பவள நாஸ்தி அகமா?! - ShareChat