: “செருப்பின் சாட்சி”
அந்த அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸ்ல ஒரு வாரமா ஒரே டென்ஷன்.
“என் பைக்கின் சீட்ட யாரு கிழிச்சுருக்காங்க?”
“செருப்பு எல்லாம் கீழே போட்டா காலையிலே காணோம்!”
“இந்த தெரு நாய்களைக் கடத்தணும்!”
வாட்ஸ்அப் குரூப் முழுக்க புகார்கள். புகைப்படங்கள். கோபம். சண்டை.
ரவி மட்டும் ரொம்பவே கோபம் கொண்டான். புதுசா வாங்கிய ஹெல்மெட்டை கீழே வச்சிருந்தான். காலையில பார்த்தா ஸ்ட்ராப்பு கடிச்சு கிழிஞ்சுருக்கு.
“இவங்களுக்குத் தினமும் சாப்பாடு போடுறவங்க தான் காரணம்! சாப்பாடு கிடைக்குதுனாலதான் இங்கயே திரளுது!” என்று கூட்டத்தில கத்தினான்.
அந்த சமயத்தில், லிப்ட்ல இருந்து வெளியே வந்த சின்ன பாப்பா நந்தினி, கையில் ஸ்கூல் பேக். அவள் மெதுவா கேட்டா:
“அங்கிள்… நாய் ஹெல்மெட்ட வேணும்னு கடிச்சுதா? இல்ல அதுக்கு வேற ஏதாவது தேவை இருந்ததா?”
அனைவரும் சிரிச்சாங்க.
ஆனா நந்தினி தொடர்ந்தாள்.
“நேத்து மழை வந்தப்போ, கார்பார்கிங்க்ல குளிரா இருந்துச்சு. அவங்க எல்லாம் பைக்குக்கீழ தஞ்சம் எடுத்துக்கிட்டிருந்தாங்க. பசிச்சிருக்கும் போல.”
ரவி இன்னும் கோபப்பட்டான்.
“அதுக்காக கிழிக்கணுமா?”
அந்த நேரம் அபார்ட்மெண்ட்டோட வயதான செக்யூரிட்டி முருகன் சொன்னார்:
“சார்… நம்ம குப்பை மூடி இல்லாம இருக்குது. சாப்பாடு கிடைக்காம இருந்தா, பசில கஷ்டப்பட்டா, இவங்க எதையாவது கடிச்சு பார்ப்பாங்க. அது கோபத்தால இல்லை. தேடுதலால,பசியால”
அந்த இரண்டு வார்த்தை—“தேடுதல்” "பசி"—ரவியோட மனசுல எங்கோ சரினு பட்டுச்சு.
அடுத்த நாள் காலை, ரவி சீக்கிரமா எழுந்தான். கார் பார்கிங்க்ல சுற்றிப் பார்த்தான். குப்பை தொட்டி திறந்துதான் இருந்தது. சாப்பாடு எங்கும் சிதறி. பைக்குகள் ஒழுங்கில்லாமல்.
அவன் முதலில் செய்தது—
குப்பை தொட்டிக்கு மூடி வாங்கி போட்டான்.
வாட்ஸ்அப் குரூப்பில் மெசேஜ் அனுப்பினான்:
“பைக் சீட்ட கிழிச்சது நாய்கள்தான். ஆனா காரணம் நம்ம அலட்சியம். குப்பைய மூடுவோம். பைக்க ஒழுங்கா நிறுத்துவோம். நாய்களுக்கு ஒரு மூலையில் தண்ணீர் வைப்போம்.”
முதலில் சிலர் மீண்டும் சண்டை போட்டாங்க.
“நீங்கதானே முன்னாடி நாய்ங்கள அப்புறபடுத்தனும்னு பேசுனிங்க இப்ப அவங்களுக்காக இப்படி பேசுறீங்க!”
ரவி அமைதியா பதில் சொன்னான்:
“நாம் பொறுப்பா இருந்தா, பிரச்சனை குறையும். இல்லனா தினமும் சீட் தான் கிழியும்.”
மெதுவா சிலர் இணைந்தாங்க.
ஒரு மூலையில் தண்ணீர் பாத்திரம் வைக்கப்பட்டது.
குப்பை ஒழுங்கா சேகரிக்க ஆரம்பிச்சாங்க.
பைக்குகள் வரிசையா நிறுத்தப்பட்டன.
பைக்கை கவர் போட்டு மூடினர்.
இரண்டு வாரம் கழிச்சு—
ஒரு சீட்டும் கிழியல.
ஒரு செருப்பும் காணாம போகவில்லை.
ஒருநாள், ரவி கார்பார்கிங்க்ல நின்னிருந்தான். முன்பு அவன் ஹெல்மெட் ஸ்ட்ராப்பு கடிச்ச நாய், அவனைக் பார்த்து வாலை ஆட்டுச்சு.
அவன் மெதுவா சிரிச்சான்.
அவன் புரிஞ்சிகிட்டான்—
நாய்கள் கிழிப்பது பொருட்கள் இல்லை.
நம்ம பொறுப்பில்லாத வாழ்க்கை முறையை.
அந்த அபார்ட்மெண்ட்டில் இப்ப யாராவது “நாய்களால்தான்!”ன்னு கத்தினா,
மற்றவர்கள் சொல்லுவாங்க:
“நம்மால்தான் இருந்ததுங்க… இப்ப நம்மால்தான் சரியானது.”
மாற்றம் பெரிய உரையால் வரல.
ஒரு கிழிந்த சீட்,
ஒரு சின்ன குழந்தை கேட்ட கேள்வி,
ஒரு மனிதன் ஏற்ற பொறுப்பு—
அதுதான் அந்த சமுதாயத்தை திருத்திச்சு.
அந்த நாளிலிருந்து,
அங்க நாய்கள் பயந்து ஓடல.
மக்கள் தான் கோபத்திலிருந்து ஓட ஆரம்பிச்சாங்க. #🐕செல்ல பிராணிகள் வீடியோ🐈 #🐶அழகான நாய்க்குட்டி #🐕செல்ல பிராணி #🐶Pet Love❤ #🐱அழகிய பூனை குட்டி


