ஆருத்ரா தரிசனம் =8
==================
.நடராஜமூர்த்தியே பஞ்சாக்ஷரம்
=====================================
தத்வார்த்த ஸுரூபம்
---------------------------------------------------
யஜுர்வேத பஞ்ச ப்ரஹ்மோபனிஷத்
=========================
"பஞ்சாக்ஷரமயம் சம்பும் பரப்ரஹ்ம ஸ்வரூபினம்
நகாராதி யகாராந்தம் ஜ்ஞாத்வா பஞ்சாக்ஷரம் ஜபேத்"
பொருள்
=========
பரப்ரஹ்ம ஸுரூபமான பஞ்சாக்ஷரத்தை தன்மயமாகக் கொண்டவர் சம்பு. பஞ்சாக்ஷரம் நகாரம் முதல் யகாரம் இறுதியாக உள்ளதென அறிந்து ஜபிக்ககடவர்
நமசிவாய – நமச்சிவாய – என்ற சொல்லின் பொருள் விளக்கம்
உலக இயக்கத்திற்கு மூலமாக உள்ள ஐந்தொழிலை பரமன் ஐந்தெழுத்தாலே நடத்துகின்றான். அந்த ஐந்தெழுத்தும் அவன் திருமேனியாக விளங்குகிறது. இதையொட்டியே நமச்சிவாய வாழ்க என்று தொடங்கி சிவபுராணப் பாடலில் மணிவாசகர் இறைவனை வாழ்த்துகின்றார்.
ந – ஆக்கல் – வலது மேல் கை
ம – காத்தல் – வலது கீழ்க் கை
சி – அழித்தல் – மேல் இடக்கை
வா – மறைத்தல் – கீழ் இடக்கை
ய - அருளுதல் – தூக்கிய இடக்கால்
ச் – ஒடுக்குதல் – ஊன்றிய வலதுகால்
இப்படி ஐந்தொழில் வல்லான் சிலை, ஆறு தொழில்களை விளக்கக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது.
ஐந்தெழுத்து மந்திர வடிவமான ஆருத்ரா தரிசன நாளில் தரிசித்து நற்கதியடைவோம் 🚩🕉🪷🙏🏻 #🙏🏼ஓம் நமசிவாய #மார்கழி ஆருத்ரா தரிசனம் #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏ஆன்மீகம்


