ShareChat
click to see wallet page
search
பூலாங்குளம் ஈஸ்வரிக்கு பூமாலை தோரணமா அவள் புகழைப் பாட வந்தோம் அதுவே நம் பாக்கியமா! பாடுங்கடி புகழ நம்ம ஈஸ்வரியின் புகழ கிழக்கு முகம் பார்த்திருக்கும் அழகு நீயும் பாரு நம்ம குலம் காக்கும் அன்னை அவளை நீயும் பாரு! பச்சை வண்ணப் பட்டுடுத்தி பவளமல்லி கொண்டு வந்து ஈஸ்வரிக்கு அலங்காரம் இன்பமாய் செய்தோம்! நிச்சயமாய் நல்லருளை அள்ளித் தரும் அன்னை அவள் அல்லிப் பூவைப் பறித்து வந்து காணிக்கையாய் தந்தோம்! அஞ்சாத வரம் தந்து அகிலத்தை ஆள்பவளே அருள் மழை பொழிந்து எங்களைக் காப்பவளே! ஆணவமும் இல்லையம்மா அகங்காரமும் இல்லையம்மா உன் பார்வையிலே தஞ்சம் புகுந்தோம் அம்மா! வேட்டுச் சத்தமும் கேட்குதடி வேகமாக வாராளே நாட்டு மக்கள் வினைதீர்க்க நலம் தரவே வாராளே! ஈஸ்வரியே பேரொளியே இந்த பௌர்ணமியில் நிலவொளியே உன் தீப ஆராதனையில் என் தீமைகள் எல்லாம் தொலையுதம்மா! கற்பூரம் ஜொலிக்குதம்மா உன் முகம் அங்கே தெரியுதம்மா சாந்தமாய் அமர்ந்தவளே ஈஸ்வரியின் புகழைப் பாடுங்கடி! வயல் எல்லாம் நாத்து நட்டு முதல் விளைச்சல் உனக்குத் தான் வண்டி வண்டியா நெல் வரும் உன் சன்னதிக்கு வந்து சேரும்! உடுக்கைச் சத்தம் அதிருதடி உச்சி வானம் பிளக்குதடி உன் பாதம் பட்ட இடமெல்லாம் செம்பொன்னாக மின்னுதடி! வேப்பிலை ஆடை உடுத்தி வேல் பிடித்து வாராளே காக்கும் தெய்வம் ஈஸ்வரியே கருணை மழை பொழிவாளே! உன் அருளால் எங்க மனம் மகிழுதம்மா உன் நினைவால் வாழ்வில் நலம் பெருகுதம்மா! நீயே எங்கள் குலதெய்வம் வரங்களை அள்ளித் தந்திடுவாய் நான் தேடாத போது வந்த தெய்வம் நீயே உன் புகழைப் பாட வரம் தந்து காக்க வந்த தாயும் நீயே! பங்குனி மாதம் சிறக்கும் எங்க ஆத்தா மனசு குளிரும் எங்க ஈஸ்வரியின் புகழை எந்நாளும் பாடிப் போற்றிப் போற்றிடுவோம்! செல்வா ✍️ #🙏ஆன்மீகம் #🙏கோவில் #அம்மன் #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟 #பத்தி