👑முருகப் பெருமானுக்கு முகங்கள் ஆறு,கண்கள் பதினெட்டு.(முகத்துக்கு ஒரு நெற்றிக் கண்ணும் உண்டு என்பது ஐதீகம்).
👑சுக்ரீவன் என்பதன் பொருள் நல்ல கழுத்தைக் கொண்டவன்.
👑சமயக்குரவர் நால்வரில் திருவிளையாடலில் இடம்பெறும் இருவர் திருஞானசம்பந்தர்,மாணிக்கவாசகர்.
👑தஞ்சாவூரில் உள்ள மூலவர்
பிரகதீஸ்வரர் அல்லது பெருவுடையார்.
👑கேசி என்ற அரக்கன் கண்ணனைக் கொல்ல குதிரை உருவத்தில் வந்தான்.
👑விஷ்ணுவை அடைய பக்தி நெறியை விட எளிய சாதனமாக கருதப்படுவது பிரபத்தி நெறி.(விஷ்ணுவை சரணடைதல்)
👑பெருமாள் கள்ளழகராக அருள்பாலிக்கும் தலங்கள்
அழகர் கோவில்,ஸ்ரீவைகுண்டம்,கள்ளபிரான் கோவில்.
👑திருமாலின் ஆயுதங்களில் பெண்ணாக கருதப்படுவது கவுமோதகி என்னும் கதாயுதம்.
👑மதுரையின் எல்லையை பாம்பு கட்டியதால் உண்டான பெயர் ஆலவாய்....
👑வாரணமாயிரம் என்பதன் பொருள் ஆயிரம் யானைகள்.
👑"எம்பாவாய்' என முடியும் பாடல்கள் கொண்ட நூல் திருப்பாவை,திருவெம்பாவை.
👑காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு ஆலவட்டம்(விசிறி)வீசி சேவை செய்தவர் திருக்கச்சி நம்பிகள்.
👑கந்தர் அனுபூதி பாடி,முருகனைப் போற்றியவர் அருணகிரிநாதர்.
👑இறைவனிடம் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய அடியவர் திருஞானசம்பந்தர்.
👑திருவண்ணாமலையில் ஜீவ சமாதியாகியுள்ள சித்தர் இடைக்காட்டுச் சித்தர்.
👑கோவில் என்பதன் பொருள் கடவுளின் வீடு,அரண்மனை.
👑நால்வர் என்று குறிக்கப்படும் அடியார்கள் சம்பந்தர்,அப்பர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்.
👑சிவபெருமானுக்கு பிரியமான வேதம்,சாமவேதம்.
👑மகாவிஷ்ணுவின் மார்பில் உள்ள அடையாளம் ஸ்ரீவத்சம்.
👑"அயோநிஜர்' என்று குறிப்பிடப்படும் மூவர் பொய்கையாழ்வர்,பூதத்தாழ்வார்,பேயாழ்வார்.
👑சப்தமாதர்களில் திருமாலின் அம்சமாக விளங்குபவள் வைஷ்ணவி.
👑சுவாமி மலையின் புராணப் பெயர் திருவேரகம்.
👑"நமசிவாய' மந்திரத்தை இசைவடிவில் ஜெபித்தவர் ஆனாய நாயனார்.
👑அப்பர் கயிலைக் காட்சி கண்டு அம்மையப்பரை பாடிய தலம் திருவையாறு.
👑சிவபாத சேகரன் என்று சிறப்புப் பெயர் கொண்டவர் ராஜராஜ சோழன்.
👑நான்முகன் திருவந்தாதியைப் பாடியவர் திருமழிசையாழ்வார்.
👑கிருஷ்ணருக்குரிய துவாதச(12 எழுத்து)மந்திரம்
"ௐ நமோ பகவதே வாசுதேவாய" (ௐ என்பது ஒரே எழுத்து).
👑கிருஷ்ணர் நாரதருக்கு வீ ணை இசைக்க பாடம் நடத்தினார்.
👑எட்டு ராணிகளுடன்(அஷ்ட மகிஷி) கண்ணன் வீற்றிருக்கும் தலம் துவாரகை.
👑கோவர்த்தனன் என்ற திருநாமத்தோடு கண்ணன் அருளும் தலம் மதுரா.
👑மன்னார் குடியில் பசுமேய்த்த கோலத்தில் இருப்பவர் ராஜகோபாலன்.
👑வாமனன் என்பதன் பொருள்,அழகானவன்.
👑சீர்காழியில் அருள்பாலிக்கும் உலகளந்த பெருமாள்,தாடாளன்.
👑பலிச் சக்கரவர்த்தி யாகம் செய்த இடம் நர்மதை நதிக்கரை.
👑விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வாமனமூர்த்தி 152 வது,திருநாமம்.
👑மகாபலி இந்திர பதவி பெறுவதற்காக யாகம் செய்தான்.
👑ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசித்த புராணம்,பிரம்மாண்ட புராணம்.பிரம்மாண்ட புராணப்படி சக்தி பீடங்கள் 51 உள்ளன.
👑தாடங்கத்தை(தோடு)சக்கரமாக அணிந்திருக்கும் அம்பிகையர்..திருக்கடையூர் அபிராமி,திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி.
👑#பராசக்தி என்பதன் பொருள் அளவிடமுடியாத அருட்சக்தி.
👑மந்திரங்களுக்கு கட்டுபட்டவள் என்பதால் அம்பிகையை மந்திரிணி என்பர்.சக்தி தலங்களில் மந்திரிணி பீடமாக விளங்கும் திருத்தலம் மதுரை.
👑பஞ்ச பூதத்தலங்களில் மண் தலத்தில் அருள்புரியும்
அம்பிகை காஞ்சி காமாட்சி.
👑இந்தியாவின் கடைக் கோடியில் விளங்கும் சக்தி பீடம் கன்னியாகுமரி.
👑மன்மதனால் அம்பிகைக்கு கோவில் எழுப்பட்ட திருத்தலம்,கவுகாத்தி காமாக்யா கோவில்.(அசாம்)
👑தேவாரத்தில் விநாயகர் வணக்கம் இடம்
பெற்றுள்ள தலம் திருவலிவலம்.(திருவாரூர் மாவட்டம்)தேவாரத்தில் முதல் ஏழு திருமுறைகளிலும் பாடல் பெற்ற சிவன் வேதாரண்யேஸ்வரர்.
👑சுந்தரரின் தோழராக கைலாயத்திற்கு உடன் சென்றவர் சேரமான் பெருமான் நாயனார்.
👑ராமபிரானால் கொல்லப்பட்ட வானரம்
வாலி.
👑சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர் சோமாஸ்கந்தர்.
👑முருகப் பெருமான் பாலனாக வலம் வந்த மயில்,இந்திரமயில்.
👑கயிலை தரிசனம் பெற அருள்புரியும் விநாயகர் துதிப்பாடல்,விநாயகர் அகவல்.
👑கைலாயத்தில் அம்பிகையின் அம்சமாக இருக்கும் ஏரி,மானசரோவர்.
👑அம்பிகை இல்லறம்,துறவறம் என இரு நிலைகளில் அருளும் தலம்
திருவாரூர்.(நீலோத்பலாம்பாள்,கமலாம்பாள்)
👑சரஸ்வதி, லட்சுமி,காளி மூவரும் மூலவராக விளங்கும் தலம் கோலாப்பூர்.(மகாராஷ்டிரா)
👑மதுரை சுந்தரேஸ்வரருக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து சிவபதம் பெற்ற அடியவர் மூர்த்தி நாயனார்.
👑ஆறுபடை வீட்டில் குகாசலம் எனப்படும் தலம்,சுவாமி மலை.
👑திருமால் மீது முகுந்த மாலை பாடியவர் குலசேகராழ்வார்.
👑யுகங்களில் தர்மயுகம் என்று சிறப்பிக்கப்படுவது,கிருதயுகம்.
👑ராமாயணத்தில் மந்திர ரத்தினமாகத் திகழ்வது,சுந்தர காண்டம்.
👑துளசிதாசர் இந்தியில் எழுதிய ராமாயணம் ராமசரித மானஸ்.
👑ராஜ ரிஷியான விஸ்வாமித்திரரின் இயற்பெயர் கவுசிகன்.
👑நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம் 'காளஹஸ்தி'.
👑பிருந்தாவனத்தில் கண்ணனைக் கொல்ல பசுங்கன்றாக வந்தவன் வத்சாசுரன்.கண்ணனைக் கொல்ல கம்சனால் அனுப்பப்பட்ட கொக்கு அசுரன்,பகாசுரன்.
👑மதுராவில் கண்ணனோடு மல்யுத்தம் செய்து தோற்ற இருவர் முஷ்டிகன்,சாணூரன்.
👑தீபாவளியின் பெருமையைச் சொல்லும் புராணம்,பிரம்ம வைவர்த்த புராணம்.
👑நரகாசுரனின் பெற்றோர் வராஹமூர்த்தி,பூமிதேவி.நரகாசுரனின் இயற்பெயர் பவுமன்.(பூமியின் பிள்ளை)
👑கங்காதேவி தீபாவளியன்று வெந்நீரில் வசிப்பதாகக் கூறுவர்.எண்ணெயில் லட்சுமி தேவி இருப்பதாக ஐதீகம்.
👑ஊமைப் பிள்ளையாய் இருந்து முருகனருளால் பாடியவர்,குமரகுருபரர்.
👑முருகனிடம் தமிழ் மொழியைக் கற்றறிந்த முனிவர் 'அகத்தியர்'.
👑கண்ணாடியில் திருத்தணி முருகனை தரிசித்து மகிழ்ந்தவர் வள்ளலார்.
👑பிருத்வி(மண்) தலம் என்று சிறப்பிக்கப்படும் இரு சிவத்தலங்கள் காஞ்சிபுரம்,திருவாரூர்.
👑மனதிலேயே இறைவனுக்கு கோவில் கட்டியவர் பூசலார் நாயனார்.
👑அன்பின் சொரூபமாக அம்பிகை விளங்கும் தலம் திருவாடானை.
👑அறுபத்து மூவர் விழாவிற்கு பெயர் பெற்ற சிவத்தலம் மயிலாப்பூர் "கபாலீஸ்வரர்".
👑அகோபிலம் என்ற சொல்லின் பொருள் சிங்ககுகை.(அகோ-சிங்கம்,பிலம்-குகை)
👑திருப்பதி மலையில் நந்தவனம் வைத்து கைங்கர்யம் செய்தவர் அனந்தாழ்வார்.
👑குரு தலமான ஆலங்குடியின் புராதனப் பெயர் திருஇரும்பூளை.
👑குருவிற்கு உகந்த மலர்,முல்லை.
👑பிருகஸ்பதி என்பதன் பொருள் கல்வியில் சிறந்தவர்.
👑சுக்கில பட்சம் என்று வளர்பிறையை குறிப்பிடுவர்.
👑பிச்சைப் பெருமான் என்று குறிப்பிடப்படுபவர்,பிட்சாடனர்.(சிவனின் ஒரு வடிவம்)
👑கோவிலில் துர்க்கையம்மனை வடக்கு திசை நோக்கி அமைப்பர்.
👑சதுரகிரியில் மகாலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர்,அகத்தியர்.
👑ஞானவடிவாக விளங்கும் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #லதாநடராஜன் பக்தி படம் & ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் #✡️ராசிபலன் #🕉️ஓம் முருகா சிவபெருமானின் திருக்கோலம் தட்சிணாமூர்த்தி


