ShareChat
click to see wallet page
search
👑முருகப் பெருமானுக்கு முகங்கள் ஆறு,கண்கள் பதினெட்டு.(முகத்துக்கு ஒரு நெற்றிக் கண்ணும் உண்டு என்பது ஐதீகம்). 👑சுக்ரீவன் என்பதன் பொருள் நல்ல கழுத்தைக் கொண்டவன். 👑சமயக்குரவர் நால்வரில் திருவிளையாடலில் இடம்பெறும் இருவர் திருஞானசம்பந்தர்,மாணிக்கவாசகர். 👑தஞ்சாவூரில் உள்ள மூலவர் பிரகதீஸ்வரர் அல்லது பெருவுடையார். 👑கேசி என்ற அரக்கன் கண்ணனைக் கொல்ல குதிரை உருவத்தில் வந்தான். 👑விஷ்ணுவை அடைய பக்தி நெறியை விட எளிய சாதனமாக கருதப்படுவது பிரபத்தி நெறி.(விஷ்ணுவை சரணடைதல்) 👑பெருமாள் கள்ளழகராக அருள்பாலிக்கும் தலங்கள் அழகர் கோவில்,ஸ்ரீவைகுண்டம்,கள்ளபிரான் கோவில். 👑திருமாலின் ஆயுதங்களில் பெண்ணாக கருதப்படுவது கவுமோதகி என்னும் கதாயுதம். 👑மதுரையின் எல்லையை பாம்பு கட்டியதால் உண்டான பெயர் ஆலவாய்.... 👑வாரணமாயிரம் என்பதன் பொருள் ஆயிரம் யானைகள். 👑"எம்பாவாய்' என முடியும் பாடல்கள் கொண்ட நூல் திருப்பாவை,திருவெம்பாவை. 👑காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு ஆலவட்டம்(விசிறி)வீசி சேவை செய்தவர் திருக்கச்சி நம்பிகள். 👑கந்தர் அனுபூதி பாடி,முருகனைப் போற்றியவர் அருணகிரிநாதர். 👑இறைவனிடம் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய அடியவர் திருஞானசம்பந்தர். 👑திருவண்ணாமலையில் ஜீவ சமாதியாகியுள்ள சித்தர் இடைக்காட்டுச் சித்தர். 👑கோவில் என்பதன் பொருள் கடவுளின் வீடு,அரண்மனை. 👑நால்வர் என்று குறிக்கப்படும் அடியார்கள் சம்பந்தர்,அப்பர்,சுந்தரர்,மாணிக்கவாசகர். 👑சிவபெருமானுக்கு பிரியமான வேதம்,சாமவேதம். 👑மகாவிஷ்ணுவின் மார்பில் உள்ள அடையாளம் ஸ்ரீவத்சம். 👑"அயோநிஜர்' என்று குறிப்பிடப்படும் மூவர் பொய்கையாழ்வர்,பூதத்தாழ்வார்,பேயாழ்வார். 👑சப்தமாதர்களில் திருமாலின் அம்சமாக விளங்குபவள் வைஷ்ணவி. 👑சுவாமி மலையின் புராணப் பெயர் திருவேரகம். 👑"நமசிவாய' மந்திரத்தை இசைவடிவில் ஜெபித்தவர் ஆனாய நாயனார். 👑அப்பர் கயிலைக் காட்சி கண்டு அம்மையப்பரை பாடிய தலம் திருவையாறு. 👑சிவபாத சேகரன் என்று சிறப்புப் பெயர் கொண்டவர் ராஜராஜ சோழன். 👑நான்முகன் திருவந்தாதியைப் பாடியவர் திருமழிசையாழ்வார். 👑கிருஷ்ணருக்குரிய துவாதச(12 எழுத்து)மந்திரம் "ௐ நமோ பகவதே வாசுதேவாய" (ௐ என்பது ஒரே எழுத்து). 👑கிருஷ்ணர் நாரதருக்கு வீ ணை இசைக்க பாடம் நடத்தினார். 👑எட்டு ராணிகளுடன்(அஷ்ட மகிஷி) கண்ணன் வீற்றிருக்கும் தலம் துவாரகை. 👑கோவர்த்தனன் என்ற திருநாமத்தோடு கண்ணன் அருளும் தலம் மதுரா. 👑மன்னார் குடியில் பசுமேய்த்த கோலத்தில் இருப்பவர் ராஜகோபாலன். 👑வாமனன் என்பதன் பொருள்,அழகானவன். 👑சீர்காழியில் அருள்பாலிக்கும் உலகளந்த பெருமாள்,தாடாளன். 👑பலிச் சக்கரவர்த்தி யாகம் செய்த இடம் நர்மதை நதிக்கரை. 👑விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வாமனமூர்த்தி 152 வது,திருநாமம். 👑மகாபலி இந்திர பதவி பெறுவதற்காக யாகம் செய்தான். 👑ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசித்த புராணம்,பிரம்மாண்ட புராணம்.பிரம்மாண்ட புராணப்படி சக்தி பீடங்கள் 51 உள்ளன. 👑தாடங்கத்தை(தோடு)சக்கரமாக அணிந்திருக்கும் அம்பிகையர்..திருக்கடையூர் அபிராமி,திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி. 👑#பராசக்தி என்பதன் பொருள் அளவிடமுடியாத அருட்சக்தி. 👑மந்திரங்களுக்கு கட்டுபட்டவள் என்பதால் அம்பிகையை மந்திரிணி என்பர்.சக்தி தலங்களில் மந்திரிணி பீடமாக விளங்கும் திருத்தலம் மதுரை. 👑பஞ்ச பூதத்தலங்களில் மண் தலத்தில் அருள்புரியும் அம்பிகை காஞ்சி காமாட்சி. 👑இந்தியாவின் கடைக் கோடியில் விளங்கும் சக்தி பீடம் கன்னியாகுமரி. 👑மன்மதனால் அம்பிகைக்கு கோவில் எழுப்பட்ட திருத்தலம்,கவுகாத்தி காமாக்யா கோவில்.(அசாம்) 👑தேவாரத்தில் விநாயகர் வணக்கம் இடம் பெற்றுள்ள தலம் திருவலிவலம்.(திருவாரூர் மாவட்டம்)தேவாரத்தில் முதல் ஏழு திருமுறைகளிலும் பாடல் பெற்ற சிவன் வேதாரண்யேஸ்வரர். 👑சுந்தரரின் தோழராக கைலாயத்திற்கு உடன் சென்றவர் சேரமான் பெருமான் நாயனார். 👑ராமபிரானால் கொல்லப்பட்ட வானரம் வாலி. 👑சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர் சோமாஸ்கந்தர். 👑முருகப் பெருமான் பாலனாக வலம் வந்த மயில்,இந்திரமயில். 👑கயிலை தரிசனம் பெற அருள்புரியும் விநாயகர் துதிப்பாடல்,விநாயகர் அகவல். 👑கைலாயத்தில் அம்பிகையின் அம்சமாக இருக்கும் ஏரி,மானசரோவர். 👑அம்பிகை இல்லறம்,துறவறம் என இரு நிலைகளில் அருளும் தலம் திருவாரூர்.(நீலோத்பலாம்பாள்,கமலாம்பாள்) 👑சரஸ்வதி, லட்சுமி,காளி மூவரும் மூலவராக விளங்கும் தலம் கோலாப்பூர்.(மகாராஷ்டிரா) 👑மதுரை சுந்தரேஸ்வரருக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து சிவபதம் பெற்ற அடியவர் மூர்த்தி நாயனார். 👑ஆறுபடை வீட்டில் குகாசலம் எனப்படும் தலம்,சுவாமி மலை. 👑திருமால் மீது முகுந்த மாலை பாடியவர் குலசேகராழ்வார். 👑யுகங்களில் தர்மயுகம் என்று சிறப்பிக்கப்படுவது,கிருதயுகம். 👑ராமாயணத்தில் மந்திர ரத்தினமாகத் திகழ்வது,சுந்தர காண்டம். 👑துளசிதாசர் இந்தியில் எழுதிய ராமாயணம் ராமசரித மானஸ். 👑ராஜ ரிஷியான விஸ்வாமித்திரரின் இயற்பெயர் கவுசிகன். 👑நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம் 'காளஹஸ்தி'. 👑பிருந்தாவனத்தில் கண்ணனைக் கொல்ல பசுங்கன்றாக வந்தவன் வத்சாசுரன்.கண்ணனைக் கொல்ல கம்சனால் அனுப்பப்பட்ட கொக்கு அசுரன்,பகாசுரன். 👑மதுராவில் கண்ணனோடு மல்யுத்தம் செய்து தோற்ற இருவர் முஷ்டிகன்,சாணூரன். 👑தீபாவளியின் பெருமையைச் சொல்லும் புராணம்,பிரம்ம வைவர்த்த புராணம். 👑நரகாசுரனின் பெற்றோர் வராஹமூர்த்தி,பூமிதேவி.நரகாசுரனின் இயற்பெயர் பவுமன்.(பூமியின் பிள்ளை) 👑கங்காதேவி தீபாவளியன்று வெந்நீரில் வசிப்பதாகக் கூறுவர்.எண்ணெயில் லட்சுமி தேவி இருப்பதாக ஐதீகம். 👑ஊமைப் பிள்ளையாய் இருந்து முருகனருளால் பாடியவர்,குமரகுருபரர். 👑முருகனிடம் தமிழ் மொழியைக் கற்றறிந்த முனிவர் 'அகத்தியர்'. 👑கண்ணாடியில் திருத்தணி முருகனை தரிசித்து மகிழ்ந்தவர் வள்ளலார். 👑பிருத்வி(மண்) தலம் என்று சிறப்பிக்கப்படும் இரு சிவத்தலங்கள் காஞ்சிபுரம்,திருவாரூர். 👑மனதிலேயே இறைவனுக்கு கோவில் கட்டியவர் பூசலார் நாயனார். 👑அன்பின் சொரூபமாக அம்பிகை விளங்கும் தலம் திருவாடானை. 👑அறுபத்து மூவர் விழாவிற்கு பெயர் பெற்ற சிவத்தலம் மயிலாப்பூர் "கபாலீஸ்வரர்". 👑அகோபிலம் என்ற சொல்லின் பொருள் சிங்ககுகை.(அகோ-சிங்கம்,பிலம்-குகை) 👑திருப்பதி மலையில் நந்தவனம் வைத்து கைங்கர்யம் செய்தவர் அனந்தாழ்வார். 👑குரு தலமான ஆலங்குடியின் புராதனப் பெயர் திருஇரும்பூளை. 👑குருவிற்கு உகந்த மலர்,முல்லை. 👑பிருகஸ்பதி என்பதன் பொருள் கல்வியில் சிறந்தவர். 👑சுக்கில பட்சம் என்று வளர்பிறையை குறிப்பிடுவர். 👑பிச்சைப் பெருமான் என்று குறிப்பிடப்படுபவர்,பிட்சாடனர்.(சிவனின் ஒரு வடிவம்) 👑கோவிலில் துர்க்கையம்மனை வடக்கு திசை நோக்கி அமைப்பர். 👑சதுரகிரியில் மகாலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர்,அகத்தியர். 👑ஞானவடிவாக விளங்கும் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #லதாநடராஜன் பக்தி படம் & ஆன்மீக சிந்தனைகள் & ஜோதிடம் #✡️ராசிபலன் #🕉️ஓம் முருகா சிவபெருமானின் திருக்கோலம் தட்சிணாமூர்த்தி
🤔 ஆன்மீக சிந்தனைகள் - ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கந்தா போற்றி ஸ்ரீ சிவ பார்ீவதி போற்றி. ஸ்ரீசிவகுடும்பத்தின் அருளாசின்இந்த நாள் இனிற பொன் நாஸாக அறைூ வா்ழ்த்துக்கள் லதா எடிட் காலை வணக்கமீ ஸ்ரீ கணேஷா ஸ்ரீ கந்தா போற்றி ஸ்ரீ சிவ பார்ீவதி போற்றி. ஸ்ரீசிவகுடும்பத்தின் அருளாசின்இந்த நாள் இனிற பொன் நாஸாக அறைூ வா்ழ்த்துக்கள் லதா எடிட் காலை வணக்கமீ - ShareChat