எத்தனை சாதாரணமாக
ஏமாந்து போகிறேன்
என்பதில் எல்லாம்
வருத்தமில்லை
அன்பெனும் நூலில்
ஒற்றைப்பூவை மட்டும்
விலக்கிக் கோர்க்க அறியும் பக்குவத்தைக் கற்பிக்கிறீர்கள்
எப்போதும் போலவே
என்னுடன் உரையாடும்
உங்கள் பொழுதுகளையோ
உங்கள் எண்ணங்களையோ
உங்கள் வேறுபாடுகளையோ
உங்கள் மாறுபட்ட மனதின் சஞ்சலங்கள் பற்றியோ
நான் எதுவும் கேட்கப்போவதில்லை
உங்களைத் தாண்டிய
உங்களின் இன்னொருபுறத்தைப்
படிக்கத் தந்தீர்கள்
அதற்கு மட்டும் நன்றி...
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
00:15

