#Today Gospel
ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.
( 1 கொரிந்தியர் 10 : 23 )
அரசாளச் சிறைச்சாலையிலிருந்து புறப்படுவாருமுண்டு;
ராஜாங்கத்தில் பிறந்து ஏழையாவாருமுண்டு.(சாலமோன் )
( பிரசங்கி 4 : 14 )
ஆளப் பிறந்த அரசன் சாலமோன் ஆண்டியாய் (தன்னை இழந்து ) போனான்.
இரண்டு முறை கர்த்தர் தரிசனமாகி எச்சரித்தும் வழிவிலகிப் போன முக்கிய காரணம் மதுபானம் & அநேக பெண்களை நேசித்தது. 1இராஜா 11:9
அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப்பண்ணினார்கள்.
( 1 இராஜாக்கள் 11 : 3 )
ஸ்திரீகளுக்கு உன் பெலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே.
( நீதிமொழிகள் 31 : 3 )
திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல.
( நீதிமொழிகள் 31 : 4 )
பரஸ்திரீகளின் வாய் ஆழமான படுகுழி; கர்த்தருடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான்.
( நீதிமொழிகள் 22 : 14 )
மனந்திரும்பிய பின் தினமும் செய்ய வேண்டியவை, இருதயத்தில் கர்த்தருடைய வார்த்தைகளும், பரிசுத்த ஆவியையும் நிரப்பிக் கொண்டே இருக்கும் போது நித்தம் அந்த ஆத்துமா காப்பாற்றப்படும்.
எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்.
( சங்கீதம் 32 : 1 )


