#good morning
இங்குள்ள படத்தை ‘அந்த ஸ்டைல பாருங்கய்யா…’ என்று எம்ஜிஆரைப் புகழ்ந்து முகநூலில் போட்டிருந்த ஒரு பதிவில் பார்த்தேன்.
அது சரி, எம்ஜிஆருக்கு இணையாகக் கால்மேல் கால் போட்டுக் கொண்டு வெகு இயல்பாக அமர்ந்திருக்கும் அந்த நபர் யார்? இந்தத் தகவல் அந்தப் பதிவில் இல்லை.
அவரும் ஒரு பத்திரிகையாளர்தான். எம்ஜிஆருக்கு மட்டுமல்ல; காமராஜர், கலைஞர், ஜெயலலிதா என அன்றைய அத்தனை அரசியல் தலைவர்களுக்கும் வேண்டியவர்தான். அவர் மட்டுமல்ல; அன்றைக்கு அனைத்துப் பத்திரிகையாளர்களும் அனைத்துத் தலைவர்களுக்கும் தெரிந்தவர்களாகத்தான் இருந்தார்கள். அதுவும் பேர் சொல்லி அழைக்கும் அளவுக்குத் தெரிந்தவர்களாக இருந்தார்கள்.
காரணம், அன்று அச்சு ஊடகங்கள் மட்டும்தான். புற்றீசல்கள் போல் காட்சி மற்றும் டிஜிடல் ஊடகங்கள் இல்லை. அதனால், பிரதமரின் பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் கூட புகைப்படக்காரர்களையும் சேர்த்துச் சுமார் இருபது பேருக்குமேல் இருக்க மாட்டார்கள். எனவே, தில்லி தலைவர்கள் கூட இங்குள்ள பத்திரிகையாளர்கள் அனைவருடைய பெயர்களைத் தெரிந்திருக்காவிட்டாலும் முகங்களை அறிந்திருப்பார்கள்.
சரி, விஷயத்திற்கு வருவோம். எம்ஜிஆருக்கு அருகிலிருப்பவர், ‘சோலை’ என்னும் புனைபெயரில் அரசியல் கட்டுரைகளை எழுதி வந்த சோமசுந்தரம். இன்றைய ஊடகக்காரர்கள் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
நன்றி : இணையம்.


