#தெரிந்துகொள்வோம் # இந்த உலகத்திலேயே சக்தி வாய்ந்தவர்கள் யார் தெரியுமா?
👉 இழப்பதற்கு எதுவுமே இல்லாதவர்கள் தான்.
அவர்களுக்கு பயமில்லை.
தோல்வி அவர்களை நிறுத்தாது.
வாழ்க்கை அவர்களை மிரட்ட முடியாது.
---
சில வருடங்களுக்கு முன் ஒரு செய்தி நம்மை அதிர்ச்சியடைய வைத்தது.
☕ காபி டேவை உருவாக்கிய தன்னுடைய பிஸ்னஸ் நஷ்டம் மற்றும் கடன் அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
கடன் என்றால் ஒரு கோடி, இரண்டு கோடி இல்லை.
👉 ₹7200 கோடி கடன்.
வெற்றி பெற்ற தொழிலதிபர்.
இந்தியா முழுவதும் கிளைகள் கொண்ட நிறுவனம்.
ஆயிரக்கணக்கான ஊழியர்கள்.
ஆனால் வாழ்க்கை ஒரே நாளில் மாறிவிட்டது.
---
அதற்குப் பிறகு எல்லோரும் நினைத்தார்கள்…
“இது இங்குதான் முடிந்தது.”
ஆனால் கதை அங்கே தான் தொடங்கியது.
கணவனின் இறப்பிற்கு பிறகு அந்த பெரிய பொறுப்பை எடுத்தார் அவரது மனைவி
.
கணவன் இல்லை.
₹7200 கோடி கடன்.
இரண்டு மகன்கள்.
சரிந்து விழும் நிறுவனம்.
கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்த சூழ்நிலை.
ஆனால் அவர் உடையவில்லை.
அழவில்லை.
ஓடவில்லை.
போராட முடிவு செய்தார்.
👉 ஒரே ஒரு ஆண்டில் கடனை ₹7200 கோடியில் இருந்து ₹3100 கோடியாக குறைத்தார்.
இன்னும் கடன் இருக்கிறது.
ஆனால் இன்று அனைவருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது —
இந்த நிறுவனம் மீண்டும் எழும்.
---
வாழ்க்கை சொல்லும் உண்மை:
பிரச்சனையில்லாத மனிதன் யாரும் இல்லை.
பணக்காரனுக்கு பெரிய கடன்.
ஏழைக்கு சிறிய கடன்.
ஆனால் எல்லோரும் போராட்டத்தில் தான் இருக்கிறோம்.
நம்ம எல்லாருக்குள்ளும் ஒரு தீ எரிகிறது.
🔥 அது நம்பிக்கை.
🔥 அது தைரியம்.
🔥 அது மீண்டும் எழும் சக்தி.
அந்த தீயை எந்த நிலையிலும் அணைய விடாதீர்கள்.
ஒருவருக்கு முடிவு போல தோன்றும் தருணம் —
இன்னொருவரின் புதிய தொடக்கம் ஆகலாம்.
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்:
இழப்பதற்கு எதுவுமில்லை என்று நினைக்கும் தருணமே
வாழ்க்கை புதிதாக ஆரம்பிக்கும் தருணம்.


