ShareChat
click to see wallet page
search
முருகனுக்கு சுருட்டு நைய்வேத்தியம் விராலிமலை சண்முகர் கோயில் தமிழகத்தில் எத்தனையோ முருகன் கோயில்கள் இருந்தாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை சண்முக கோயில் விசித்திரமானது இங்கே சாய்ரட்சை பூஜையின் போது சுருட்டு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது பல ஆண்டுகளுக்கு முன்பு விராலிமலை கோயில் திருப்பனையில் கருப்பமுத்து என்ற தீவிர பக்த ஈடுபட்டு வந்தார் இப்பகுதியில் காற்றும் மழையும் பெய்து கொண்டிருந்தபோது கருப்பு முத்து ஆற்றை கடந்து செல்ல வேண்டி இருந்தது ஆனால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அவரால் ஆற்றை கடக்க முடியவில்லை மழையிலும் குளிரும் நடுங்கியபடி நின்றிருந்த அவர் முருகனை பிரார்த்தனை செய்து கொண்டே குளிர் தாங்குவதற்காக தன்னிடம் இருந்த ஒரு சுருட்டை பற்ற வைத்தார் அப்போது அவர் அருகே ஒரு முதியவர் நெருங்கிய படி வந்து நின்றார் அவர் மீது இறக்கப்பட்ட கருப்புமுத்து என்னிடம் இருந்த மற்றொரு சுருட்டை எடுத்து அவரிடம் கொடுத்து உங்களுக்கும் சுருட்டு வேண்டுமா என்று கேட்டார் அந்த முதியவரும் சுருட்டை வாங்கிக் கொண்டார் பின்னர் அந்த நபரை கருப்பமுத்துக்கு பாதுகாப்பாக ஆற்றைக் கடக்க உதவி செய்தார் கரையை சேர்ந்தவுடன் அந்த நபர் திடீரென காணாமல் போய்விட்டார் இதனைத் தொடர்ந்து கருப்ப முத்து கோயிலுக்கு சென்று முருகனை தரிசித்த போது அங்கு ஒரு பெரும் அதிசயம் காத்திருந்தது தான் அந்த முதியவருக்கு கொடுத்த அதே சுருட்டு கருவறையில் முருகன் சிலையின் முன்னால் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் அங்கிருந்த மற்ற பக்தர்களும் இதை கண்டு வியந்தனர் அந்த முதியவராக வந்து உதவி செய்தது முருகப்பெருமானே என்பதை அனைவரும் உணர்ந்தனர் இந்த நிகழ்வின் காரணமாக அன்று முதல் மாலை வேளையில் முருகனுக்கு சுருட்டு நைய்வேத்தியம் படைக்கும் பழக்கம் உருவானது இடைக்காலத்தில் புதுக்கோட்டை மகாராஜா இறைவனுக்கு சுருட்டு படைப்பது முறையல்ல என்று அந்த பழக்கத்திற்கு தடை விதித்தார் அன்று இரவு மன்னர் கனவில் வந்த முருகன் எனக்கு சுருட்டு படைப்பது முக்கியம் தருவதற்கு அல்ல துன்பப்படும் ஒருவனுக்கு ஏதோ ஒரு வழியில் உதவி செய்ய வேண்டும் என்று எண்ணிய என் பக்தனின் உயர்ந்த மனப்பான்மையை மதிப்பதற்காகவே நான் அதை ஏற்றுக் கொண்டேன் அந்த சுருட்டு தகுதியற்றதாக தோன்றினாலும் அது இருந்த அன்பிற்காகவே ஏற்றுக்கொண்டேன் எனவே இந்த பழக்கம் தொடரட்டும் தடை செய்யாதே என்று கனவில் தோன்றிய முருகன் கூறினார் இதன் பின்னர் தனது தடையை மன்னர் விளக்கி கொண்டார் இன்றும் இக்கோயிலில் சுருட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது இறைவனுக்கு நாம் என்ன கொடுக்கிறோம் என்பதை விட எவ்வளவு அன்புடன் கருணையுடன் கொடுக்கிறோம் என்பதை இத்தலம் உணர்த்துகிறது காலை 6 மணி முதல் 11 மணி 30 நிமிடம் வரை மாலை 5 மணி இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இத்தலம் அமைந்துள்ளது திருச்சியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருச்சி மற்றும் மணப்பாறையில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன அருகில் உள்ள ரயில் நிலையம் மணப்பாறை #ஆன்மீகம்
ஆன்மீகம் - 9 முருகனுக்குசுருட்டு நைவேத்தியமா?! விராலிமலை சண்முகர் கோயில் ஆச்சரியங்கள்! 9 முருகனுக்குசுருட்டு நைவேத்தியமா?! விராலிமலை சண்முகர் கோயில் ஆச்சரியங்கள்! - ShareChat