ShareChat
click to see wallet page
search
எலியா ஏன் பயந்தாய்? தீர்க்கதரிசியாகிய எலியா யேசபேல் அரசிக்கு பயந்து ஓடியபோது தேவனுடைய பர்வதத்தில் நடந்த சம்பவம் இது: அப்பொழுது, இதோ, கர்த்தர் கடந்துபோனார்; கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை; காற்றிற்குப்பின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று; பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை. பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லியசத்தம் உண்டாயிற்று. அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து...(1 இராஜா 19:11-13) பாருங்கள், தன் கண்முன் நடந்த சம்பவங்களைக் கண்டு எலியா மிரண்டு போயிருப்பார். அதனால்தான் தன் சால்வையினால் முகத்தை மூடிக்கொள்ளுகிறார். இப்படிப்பட்ட அனுபவத்தை ஏன் தேவன் எலியாவுக்குத் தரவேண்டும்? "எலியா, ஏன் பயந்தாய்? நீ எப்பேற்பட்ட தேவனுடைய தீர்க்கதரிசி தெரியுமா? அப்படியிருந்தும் ஒரு சாதாரண பெண்ணுக்கு பயந்து இங்கே ஓடிவந்தது ஏன்?" என்பதை எலியாவுக்கு உணர்த்த தேவன் அவருடைய கண்களுக்கு முன்பாக இந்தக் காரிங்களை நிகழ்த்திக் காட்டினார். உங்கள் வாழ்க்கையில் உங்களை பயமுறுத்தும் சம்பவங்கள் வரும்போது இந்த வேதபகுதியை நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் பிரச்சனையைவிட தேவன் பிரம்மாண்டமானவர். நீங்கள் சேவிக்கும் தேவன் சாதாரணமானவர் அல்ல, அவர் சேனைகளின் கர்த்தர், யுத்தத்தில் வல்லவர். உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க அவர் போதுமானவர். ஆமென். #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ்