ShareChat
click to see wallet page
search
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமையப்பட்டுள்ள மிகவும் அபூர்வமான தலம் அருள்மிகு புருஷோத்தமர் திருக்கோயில் ஆகும் பொதுவாக பெருமாள் ஒரு சங்கு ஒரு சக்கரத்துடன் காட்சி தருவாள் இங்குள்ள பெருமாள் இரண்டு சங்கு இரண்டு சக்கரங்களுடன் 8 கரங்களோடு மகாவிஷ்ணுவாக காட்சி தருகிறார் செல்வம் மற்றும் ஆற்றல் இரண்டையும் ஒரு சேர வழங்கும் ஒப்பற்ற கோலம் இது கருடாழ்வாரின் தோள் மீது அமர்ந்த நிலையில் அன்னை அலர்மேலு மங்கையுடன் சுவாமி காட்சி தருகிறார் கருடனின் வலது கையில் சுவாமியின் பாதமும் இடது கையில் உள்ள மலரில் தாயாரின் பாதமும் இருப்பது கண் கொள்ளா காட்சி இதனை நித்திய கருட சேவை என்பர் சோழ மன்னன் பராந்தகன் புத்திர பாக்கியம் வேண்டி வழிபட்ட தலம் இன்றும் குழந்தை வரம் வேண்டுபவர்கள் இங்கு வந்து மனம் உருகி வேண்டினால் புருஷோத்தமரின் அருளால் குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம் ஏக பத்தினி விரதன் என்ற பெயருக்கு ஏற்ப சுவாமி ஒரு தாயார் மட்டும் இங்கு அருளுகிறார் புதுமண தம்பதிகள் இங்கு வந்து வணங்கினால் வாழ்க்கை முழுவதும் ஒருவருக்கொருவர் பிரியாமல் அன்போடும் பண்போடும் வாழ்வார்கள் என்பது ஐதீகம் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் தொல்லையால் அவதிப்படுவார்கள் இந்த அஷ்ட புயங்கர் பெருமாளை வழிபட நற்பலன்கள் கிட்டும் அருள்மிகு அஷ்ட புயங்கரை வழிபடுவோம் ஐஸ்வர்யம் பெறுவோம் #பக்கி
பக்கி - @reddiyur aanmigam இரட்டைசங்குமற்றும் ரட்டைசக்கரத்துடன் கூடியபெருமாள் புத்திரப்பேறு அருளும் புருஷோத்தமர்! @reddiyur aanmigam இரட்டைசங்குமற்றும் ரட்டைசக்கரத்துடன் கூடியபெருமாள் புத்திரப்பேறு அருளும் புருஷோத்தமர்! - ShareChat