ShareChat
click to see wallet page
search
மற்றொருவரின் மனைவியுடன் தொடர்பு கொள்வதை நிறுத்துங்கள்.. கேளுங்கள் நண்பர்களே... ஒரு மனிதன் எப்போதும் தாண்டக்கூடாத எல்லைகள் உண்டு. நீ தட்டக்கூடாத கதவுகள் உண்டு. நீ கை வைக்கக்கூடாத பெண்கள் உண்டு. மற்றொருவனின் மனைவி? நிச்சயம் அது தடைசெய்யப்பட்ட பகுதி. உன்னை பயமுறுத்துவதால் அல்ல. மாறாக, உன்னை நீயே மதிப்பதால். உனது கௌரவத்தை நீ புரிந்துகொள்வதால். உனது பாரம்பரியத்தை நீ புரிந்துகொள்வதால். அதோடு முக்கியமாக, கர்மா ஒருபோதும் மறப்பதில்லை என்பதால். 1️⃣ தன் கணவனை ஏமாற்றும் ஒரு பெண் உன்னையும் ஏமாற்றுவாள் கடவுளுக்கும், ஊர் உலகத்திற்கும், குடும்பத்திற்கும் முன்பாக மரியாதையுடன் வாழ்வதாக உறுதியளித்த ஒருவனையே அவளால் விட்டு வர முடியுமென்றால், அவளுக்கு நீ யார்? நீ ஒன்றும் விசேஷமானவன் அல்ல. நீ ஒரு தற்காலிக ஈர்ப்பு. ஒரு தற்காலிகத் சந்தோசம். ஒரு வடிகால். அவளுக்கு ஏற்படும் அந்தப் பரவசம் மறைந்தவுடன், அவள் உன்னை வெறுமையாக்கி, உன் சுயமரியாதையை கேள்விக்குள்ளாக்கி, உன் அமைதியை உடைத்துவிட்டுச் சென்றுவிடுவாள். 2️⃣ நீ கடவுளால் கூட போக்க முடியாத சாபங்களை வரவழைத்துக் கொள்வாய்: திருமணமான பெண்ணுடன் உறவுகொள்வது என்பது உன் சொந்த அழிவுடன் சதுரங்கம் விளையாடுவதற்குச் சமம். அது கண்ணுக்குத் தெரியாத போர்களுடன் வருகிறது அது கண்ணுக்குத் தெரியாத குழப்பங்களுடன் வருகிறது — எல்லையில்லாத பின்னடைவுகள் மற்றும் மனக் குழப்பங்களுடன் உங்களுக்கு தோல்விகளை பரிசாக தரும் போர். நீ உன் கவனத்தையும், உன் அமைதியையும், உன் ஆசீர்வாதங்களையும் இழந்துவிடுவாய். பாவத்தில் நீ தொடங்கிய போரில் உன்னால் வெற்றிபெற முடியாது. 3️⃣ நீ அவளது கணவனை விட உனக்கே அதிகம் துரோகம் செய்கிறாய். உன்னையே நீ அவமதிக்கிறாய், அவனை அல்ல. இது பயத்தைப் பற்றியது அல்ல. இது கௌரவத்தைப் பற்றியது. ஒவ்வொரு முறையும் நீ ஒரு திருமணமான பெண்ணைத் துரத்தும்போது, உன் பலவீனத்தை நீயே வெளிப்படுத்துகிறாய். ஒழுக்கத்தை விட்டுவிட்டு அவச சுகத்திற்கு அடிமையாகிறாய். உண்மையான ஆண்கள் மற்றவனின் வீட்டை ஆக்கிரமிப்பதில்லை — அவர்கள் தங்கள் சொந்த வீட்டை அன்பால் கட்டுகிறார்கள். 4️⃣ அதே பெண் அடுத்ததாக உன்னையே அழிப்பாள் உனக்காக அவள் தன் கணவகுக்கு துரோகம் செய்தால், அடுத்தவனுக்காக அவள் உனக்கும் துரோகம் செய்வாள். விசுவாசம் என்பது நெகிழ்வானது அல்ல — ஒன்று இருக்கும் அல்லது இருக்காது. அவள் தன் தோற்றத்தால் ஆபத்தானவள் அல்ல. அவள் தனக்கே நேர்மையாக இல்லாததால் மிக மிக ஆபத்தானவள். 5️⃣ நீ அவள் கணவனிடமிருந்து தப்பிக்கலாம் — ஆனால் விளைவுகளிலிருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது நீ ஒளிந்துகொள்ளலாம், செய்திகளை நீக்கலாம், உண்மையை மறுக்கலாம் — ஆனால் கர்மா பொறுமையாகக் காத்திருக்கும். அது உன் நிதிநிலை, உன் அமைதி அல்லது உன் சொந்தக் குடும்பத்தையே பாதிக்கும். ஒரு கண நேர காமத்திற்காக உன் எதிர்காலக் குடும்பத்தை பிரச்சனையில் சிக்க வைக்காதீர்கள். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள். உன் குழந்தை என்ன பாவம் செய்தது. நீ செய்யும் பாவத்திற்கு உன் குழந்தை தண்டிக்கப்படுவது நியாயம் இல்லாதது. உன் விதியை, அழிவிற்காகப் பரிமாறிக்கொள்ளாதே. திருமணமான பெண் என்பவள் தொடக்கூடாதவள். எப்போதும். பயத்தால் அல்ல, மாறாக மரியாதைக்காக — உனக்காக, உன் எதிர்காலத்திற்காக, மற்றும் ஆண்களின் தர்மத்திற்காக. தெருக்கள் உன்னைக் கவனிக்கின்றன. கர்மா பதிவு செய்கிறது. கட்டுப்பாட்டுடன் இருங்கள். தூய்மையாக இருங்கள். உறுதியாக இருங்கள். உறுதியான, தூய்மையான, கட்டுப்பாடான மனிதனை எவராலும் வெல்ல முடியாது. பணத்தால், புகழால், கௌரவத்தால் எல்லையில்லாத உயரத்தை அவன் அடைவான். புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது.. வாழ்த்துக்கள். #🚹உளவியல் சிந்தனை #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #💪Motivational Quotes #💑கணவன் - மனைவி #💑கணவன் மனைவி காதல்💞
🚹உளவியல் சிந்தனை - ShareChat