ShareChat
click to see wallet page
search
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📰தமிழக அப்டேட்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கலைர் கனவு இல்லம் திட்டம் கூடுதல் ஒதுக்கீட்டின் கீழ் பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி (1203,2028) அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் கூடுதல் ஒதுக்கீட்டின் கீழ் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார்.இந்நிகழ்வில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், முன்னிலை வகித்தார். தமிழ்நாடு முதல்வர் தலைமையிலான அரசு 2021ம் ஆண்டு பொறுப்பேற்ற நாள் முதல் தொடர்ந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் குடிசை வீடுகளில் வாழ்ந்து வரும் கிராமப்புற எழைப் பொதுமக்களின் மீது கொண்டிருந்த கருணையையும் குடிசையில்லா தமிழ்நாடு" என்ற அவரது தொலைநோக்குப் பார்வையையும் மெய்ப்பிக்கும் வகையில் கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் உள்ள குடிசை வீடுகளுக்குப் பதிலாக புதியதாக பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்துத் தரும் வகையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் என்ற சிறப்பு வாய்ந்த திட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் படி 2030-ம் ஆண்டிற்குள் 8 லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டு குடிசை இல்லா தமிழ்நாடு என்ற வகையில் திட்டம் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2024-2025 ஆண்டு ஒரு வீடு ரூ. 3,53,900/- என்ற மதிப்பீட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 3114 வீடுகள் 110.204 கோடி மதிப்பீட்டில் கட்டித்தரப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக இந்த நிதியாண்டில் ஒரு வீடு ரூ. 3,55,600/- என்ற மதிப்பீட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 5400 வீடுகள் ரூ. 19202 கோடி மதிப்பீட்டில் கட்டித்தருவதற்கு கிராம அளவிலான தேர்வுக்குழுவின் மூலமாகத் தேர்வு செய்யப்பட்டு கிராம சபை ஒப்புதல் பெறப்பட்ட 5400 பயனாளிகளுக்கான வேலை உத்திரவு வழங்கப்பட்டு தற்பொழுது வரை 4605 வீடுகள் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 795 வீடுகள் முடிவடையும் தருவாயிலுள்ளன. இதில் 29 வீடுகள் நெசவாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த 29 வீடுகள் 4.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும். கூடுதல் தொகை ரூ. 50,000/-கைத்தறித்துறை மூலம் வழங்கப்படும். இதன்தொடர்ச்சியாக ஒரு வீடு ரூ. 3,62,000/- என்ற மதிப்பீட்டில் இந்நிதியாண்டில் கூடுதலாக 5000 வீடுகள் ரூ.1810 லட்சம் மதிப்பீட்டில் கட்டித் தர 18 ஊராட்சி ஒன்றியங்களில் 5000 பயனாளிகள் தேர்வு ஆணையிடப்பட்டது. இதன்படி செய்யப்பட்டு வீடுகள் கட்டித்தருவதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. மேலும் இன்றைய தினம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சட்டமன்றத் துணைத்தலைவர் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியங்களில் சேர்ந்த பயனாளிகளுக்கு வேலை ஆணைகளை வழங்கினார் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கு பணி ஆணைகளை பெற்ற பயனாளிகள் அனைவரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தங்களின் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் மரு.ஆர்.மணி, செயற்பொறியாளர் (ஊ.வ) கு. இளங்கோ, உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) பா. சஞ்சீவி குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 - உயா்கல்வித்துல திருவண்ண 0)60 ும் பசி உயா்கல்வித்துல திருவண்ண 0)60 ும் பசி - ShareChat