#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰தமிழக அப்டேட்🗞️ #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் தேர்தல் செலவீன குழுக்கூட்டம் நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், தலைமையில் (11.03.2026) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்தல் செலவீனங்களை கண்காணிக்க திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்ட அமலாக்க முகமைகளின் மாவட்ட அளவிலான பொறுப்பு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை இயக்குனர், மாவட்ட அளவிலான வங்கி தொடர்பு அலுவலர், சுங்கவரித்துறை, அஞ்சலகத்துறை, கலால் துறை, ரயில்வேத்துறை மற்றும் வணிகவரித்துறை சார்பாக நியமிக்கப்பட்ட மாவட்ட அளவிலான பொறுப்பு அலுவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பல்வேறு தேர்தல் தொடர்பான செலவினங்களை கட்டுப்படுத்தி கண்காணிக்கும் பொருட்டு தேர்தல் காலங்களில் செய்யப்படும் செலவினங்களை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள வழிமுறைகளை பின்பற்றி தீவிரமாக கண்காணிக்குமாறு அனைத்து அலுவலர்களுக்கும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுதினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், மாவட்ட வன அலுவலர் சுதாகர், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


