1982 ஆம் ஆண்டு #ஜனவரி_19 அன்று நடைபெற்ற பொதுவேலை நிறுத்தப் போராட்டத்தில் காவல் துறையினால் சுட்டுக் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த தியாகிகள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோரின் நினைவுதினம் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதே நாளில் , ராஜஸ்தான், மத்தியப்
பிரதேசம், ஹரியானா, பீகார், குஜராத், மகாராஷ்டிரா, மாநிலங்களிலும் காவல் துரையின் அடக்குமுறை தடியடி நடவடிக்கைகள் நடைபெற்றன
அரசின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் பொதுப்பிரச்சனைகளின் அடிப்படையில் இந்திய உழைப்பாளி மக்கள் நடத்திய நாடுதழுவிய பொதுவேலைநிறுத்தம் தொழிலாளிவர்க்கத்தின் வலிமையை எதிரி வர்க்கத்திற்கு எடுத்து காட்டியது மட்டுமல்ல, தங்களது எல்லையற்ற வலிமையை தாங்களே உணர்ந்து கொள்ளவும் உதவி செய்தது.
இந்த தினத்தில் தியாகிகள் தின உறுதியேற்பு தமிழகமெங்கும் நடைபெறுவதில் நாமும் பங்கெடுப்போம். இத்தியாகச் செம்மல்களின் நினைவு நாளில் தொழிலாளிவர்க்க ஒற்றுமையைப் பாதுகாப்போம். #lifes #life


