மார்ச் -23
சுதந்திர போராட்ட மாவீரர் CPIM கட்சியின் முன்னால் பொதுச்செயலாளர் தோழர் #ஹர்கிஷன்சிங்_சுர்ஜித் பிறந்தநாள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக 1992 முதல் 2005 வரை பதவியில் இருந்தார். 1964 ஆம் ஆண்டில் இருந்து கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
ஜலந்தரில் உள்ள பந்தலா கிராமத்தில் பிறந்தார் . சுர்ஜீத்தின் மனைவி பிரீத்தம் கெளர். இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
பொது வாழ்க்கை
சுதந்திரப் போராட்ட வீரர் , விவசாயிகளை அணிதிரட்டுவதில் மகத்தான பங்கு ,இந்தியாவில் கூட்டணி அரசியல் சகாப்தத்தை உருவாக்கிய சிற்பி , மதச்சார்பின்மை உயர்த்திப் பிடித்தவர் , பொதுவுடமைவாதி , எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டது இவரது பொது வாழ்வு .
சுதந்திரப் போராட்டத்தில்
அவர் இளமைப் பருவத்தில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.பதினான்கு வயதில் போலீசாரின் துப்பாக்கிக் குண்டை எதிர்கொண்டு ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் மூவர்ணக் கொடி ஏற்றிய தீரர்.பகத்சிங் அமைத்த நவஜவான் பாரத் சபா அமைப்பில் பணியாற்றியவர்.
பொதுவுடமை இயக்கத்தில்..
இந்தியப் பொதுவுடமைக் கட்சியில் 1936 இல் இணைந்தார். பின்னர் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவடைந்த போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.13 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகப் பணியாற்றிய சுர்ஜீத், தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.1978 முதல் 1984 வரை மாநிலங்களவை உறுப்பினர் பதவி வகித்த சுர்ஜீத், இரண்டு முறை பஞ்சாப் சட்டப் பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார் (1953- 57 மற்றும் 1967- 69).காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்டப் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட புத்தககங்களையும் அவர் எழுதியுள்ளார்.
இறுதி காலத்தில் தனது சொத்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காக எழுதிவைத்தார்... #life #lifes


