வாழ்வில் திரு தடைகள் திருமண தாமதம் தீராத நோய்களால் அவதிப்படுதல் ஜாதகத்தில் ராகு கேது தோஷம் புத்திர தோஷம் இதற்கெல்லாம் மிக சிறந்த தீர்வாக திகழ்கிறது கும்பகோணம் அருகில் உள்ள திரு பம்பரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோயில்
புராண காலத்தில் ஒருமுறை பாம்புகளின் அரசன் ஆதிசேஷன் சிவபெருமானை வழிபட விரும்பினார் ராகு மற்றும் கேது இருவரும் ஒரே உடலாக இணைந்து சிவனை நோக்கி தவம் தவம் செய்த தலம் இதுவாகும் சிவபெருமானின் அருளால் ராகுவும் கேதுவும் தங்களுக்கு ஏற்பட்ட சாபங்கள் இருந்து விடுபட்ட இடம் என்பதால் இது தென்காளஹஸ்தி என்று அழைக்கப்படுகிறது
மற்ற ராகு கேது தலங்களைவிட திருப்பாம்புரம் ஏன் தனித்து உள்ளது
இங்கே ராகுவும் கேதுவும் தனித்தனியாக இல்லாமல் ஒரே உடலாக இணைந்து ஈசனை வணங்கும் கோலத்தில் காட்சி தருகின்றனர்
இந்த ஊரில் பாம்புகள் யாரையும் கடித்தது இல்லை என்றும் அப்படியே கடித்தாலும் விஷம் ஏறாது என்ற அசைக்க முடியாத தீராத நம்பிக்கை இருக்கிறதே
இழந்த பதவி செல்வம் மற்றும் நிம்மதியை மீண்டும் பெற இத்தலம் சிறந்த இடமாக விளங்குகிறது
காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள்
ராகு தசை அல்லது கேது தசை நடப்பவர்கள் மேலும் அவரவர் ஜாதகத்தில் இரண்டு நான்கு ஏழு எட்டு பன்னிரண்டு இந்த இடங்களில் ராகுலுக்கு கேது இருப்பவர்கள்
திருமணம் தள்ளிக் கொண்டே போகும் ஆண் மற்றும் பெண் இவர்கள்
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள்
கனவில் அடிக்கடி பாம்புகளை காண்பவர்கள்
கோயிலுக்கு சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடுவது சிறப்பு அவ்வாறு இயலாவிட்டால் கை கால்களை அலம்பிக் கொள்ளலாம்
ராகு கேது சன்னதியில் வெள்ளி நாகத்திற்கு பால் அபிஷேகம் செய்யப்படும் அபிஷேகம் செய்யும் பால் நீல நிறமாக மாறுவது இங்குள்ள ஒரு அதிசயமாகும்
ராகுவுக்கு பிடித்த உளுந்து பொடி சாதம் கேதுவுக்கு பிடித்த கொள்ளு பொடி சாதம் இவற்றை நிவேதனமாக படைத்து வழி பட வேண்டும்
ராகுவுக்கு கருப்பு அல்லது நீலநிற ஆடையும் கேதுவுக்கு பலவண்ண ஆடையும் அணிவித்து அர்ச்சனை செய்யலாம்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் கோயில் அமைந்துள்ளது காரைக்கால் கும்பகோணம் மார்க்கத்தில் இக்கோயில் உள்ளது
காலை 6:00 மணி முதல் 12 மணி வரை மாலை நாலு மணி முதல் 8 மணி வரை நடை திறந்திருக்கும் ராகுகாலம் நேரங்களில் இங்கு பரிகாரம் செய்வதே விசேஷமானது #🙏ஆன்மீகம்


