எண்ணிப்பார்க்கிறேன்
இப்போது
இந்தக் காதல்
இத்தனை செழிப்பாய்
இந்த உலகில்
எப்படி வளர்ந்ததென்று?
வளராதா பின்னே?!
என் கண்ணீரை உண்பதுபோல்
இன்னும் இவ்வுலகில்
எத்தனைப்பேரின் கண்ணீரை
உணவாய் உண்டு
உயிர் வாழ்கிறதோ?
ஓ காதலே..
வா...இதோ
அவள் நினைவுகளை
விறகாக்கி என் நெஞ்சினை
அடுப்பாக்கி உனக்கான
உணவை சமைத்து விட்டது
உன் விழிகள்
நினைவுகள் தீர்ந்துப்போகாது
இதனால்தான்
நித்தமும் நீ செழிக்கிறாய் காதலே
நித்தமும் நீ செழிக்கிறாய்... #💔 காதல் தோல்வி #🥺சோக வாழ்க்கை #😔தனிமை வாழ்க்கை 😓 #😫சோக ஸ்டேட்டஸ் #💓காதல் வலிகள்


