🌿 *இன்றைய தேவ வார்த்தை* 🌿
📖 *தேவ வசனம்*
*“உன் தகப்பனையும் உன் தாயையும் கணம் பண்ணுவாயாக;* *அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீண்ட நாட்கள் இருப்பாய்.”*
— *யாத்திராகமம் 20:12*
🎙️ *செய்தி*
தகப்பனையும் தாயையும் கணம் பண்ணுவது ஒரு மனித கடமை மட்டுமல்ல, அது தேவன் கொடுத்த ஆசீர்வாதத்தின் திறவுகோலும் ஆகும். பெற்றோர்கள் நமக்காக பல தியாகங்களையும் கஷ்டங்களையும் சகித்துக் கொண்டு நம்மை வளர்த்தவர்கள். அவர்களை மதிப்பது, அவர்களின் வார்த்தைகளை கவனிப்பது, அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்யுதல் — இவை அனைத்தும் தேவனுக்குப் பிரியமான செயல்களாகும்.
பெற்றோர்களை கணம் பண்ணும் வாழ்க்கை வாழும் மனிதனுக்கு தேவன் நீண்ட ஆயுளையும் சமாதானமான வாழ்க்கையையும் வாக்குத்தத்தமாக அளித்துள்ளார். சில சமயங்களில் அவர்கள் நம்மை புரிந்து கொள்ளவில்லை, நம்மிடம் அன்பாக நடக்கவில்லை, கடமைகளை கூட செய்யவில்லை என்று நாம் எண்ணினாலும், மன்னியுங்கள் அவர்களை மதிக்கும் மனப்பான்மை நம்முடைய இதயத்தை ஆசீர்வாதத்திற்கு தகுதியானதாக மாற்றுகிறது. இன்று நீங்கள் உங்கள் பெற்றோருக்கு அன்பான வார்த்தை பேசுங்கள், அவர்களுக்காக ஜெபியுங்கள், அவர்களை கௌரவிப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய கிருபை பெருகுவதை அனுபவியுங்கள்.
-- ✍️*சகோ சுதாகர் காட்வின்*
🔥*ஹெப்ரான் ஜெப ஊழியங்கள்* #சகோ சுதாகர் காட்வின் #ஹெப்ரான் ஜெப ஊழியங்கள் #பைபிள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏


