ShareChat
click to see wallet page
search
#மண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
மண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் - மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு . உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திட்டம் , வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் மூலம் சேலம் மாவட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தி மேற்கொள்ளப்படும் வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று ( 13.3.2026 ) நடைபெற்றது . இக்கூட்டத்தில் மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு . எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் , மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் திரு . ஆர் . ராஜேந்திரன் , மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி , நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.எஸ்.ஆர்.சிவலிங்கம் , திரு.டி.எம்.செல்வகணபதி , சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு . பிரதீப் யாதவ் , இ.ஆ.ப. , மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி , இ.ஆ.ப. , மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ரவிக்குமார் , திட்ட இயக்குநர் ( மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ) திருமதி ம.வாணி ஈஸ்வரி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் . - ShareChat