அணைத்துக் கொள்ளுதல் என்னவோ காமத்துக்கும், காதலுக்கும் மட்டுமேனு.
மாற்றி விட்டது இன்றைய தலைமுறை
உடம்பு சரியில்லாத அப்பாவையோ, அம்மாவையோ,
மனசு கஷ்டப்படுற தம்பியவோ, தங்கச்சியவோ,
அக்காவையோ, அண்ணனையோ,
தன்னோட பிரச்சினைய சொல்ல முடியாது தவிக்குற பொண்டாட்டியாவோ,
புருஷனாவோ,
ஏன்டா எனக்கு மட்டும் இப்படி நடக்குதுனு அழுகுற தோழன், தோழியாவோ,
ஒவ்வொருத்தருக்கும் ஏதோ ஒரு தோள் வேணும் சாஞ்சுக்கறதுக்கு..
அதுக்குப் பேர், காதலோ, காமமோ இல்ல..
பரிதவிப்பு..
எனக்கு யாரும் உதவியா,
அனுசரணையா இருப்பீங்களாங்கற பதட்டம்..
சக மனிதனோட அன்பும், வியர்வை வாசமும், நேசமும் இல்லாம ஒரு கொழந்தை கூட பொறக்க முடியாது பூமியில...
நாம் பேசுற நூறு வார்த்தைய விட,
தோள்ல கை போட்டு,
நா பாத்துக்கறேன் போய்யாங்கற வார்த்தைல, நம்பிக்கையோட போவான்..
நான் இருக்கேன்னு
ஒரு அப்பன் அணைக்கும் வினாடியில் ஒரு குழந்தை உலகத்தையே எதுத்து ஜெயிக்குற போராளி ஆகுது..
உனக்கு நான் இருக்கேன்டீ ங்கற ஒத்த வார்த்தை ஒரு பொண்ணப் பூப்பூக்க வெக்குது..
எவ்ளோ கஷ்டம் னாலும்,
நா கூட இருக்கேன்டான்னு,
ஒரு பொண்ணு தலை தடவிக் கட்டிக்குற ஆம்பள சோடை போகவே மாட்டான்..
தினம், தினம் இங்க இயல்பா நடக்கும் விஷயங்கள,
அந்த டே,
இந்த டேன்னு,
டே, டே ன்னு கொண்டாடுறத விட...
இயல்பா வீட்டுல இருக்க ஜீவன்கள தலை கோதி விடுங்க..
வாழ்க்கை நல்லா இருக்கும்.
#💞பிப்ரவரி-12 ஹாப்பி ஹக் டே💕 #💞ஹாப்பி ஹக் டே💕 #🫂Happy Hug Day💕 #🌹Thursday thought✨️ #thursday சிந்தனை


