ShareChat
click to see wallet page
search
திருவாசி சகஸ்ர லிங்க மூர்த்தி மூலம் விதியையும் மாற்றும் வழிபாடு ஒரு மனிதனுடைய தலைச் சுழியில் அமைக்கப்படும் இந்த பஞ்ச பூத தத்துவ அமைப்பை விவிதத்ரயம் என்று அழைக்கிறார்கள். இவ்வாறு விவிதத்ரய சக்திகள் பரிணமிக்கும் மூர்த்திகளை வணங்குவதால் நமது பஞ்ச பூத ரகசிய அமைப்பு முறையாகப் பாதுகாக்கப்பட்டு எந்த வித பில்லி சூன்ய சக்திகளும் நம்மை அண்டாது பாதுகாத்துக் கொள்ளலாம். திருவாசி சகஸ்ர லிங்க மூர்த்தி, விழுப்புரம் அருகே திருவக்கரை ஸ்ரீசந்திர சேகர மூர்த்தி, சென்னை அருகே சித்துக்காடு ஸ்ரீதாந்த்ரீஸ்வரர் போன்ற மூர்த்திகள் இத்தகைய விவிதத்ரய சக்திகளை வாரி வழங்கும் தெய்வ மூர்த்திகள். உரிய வழிபாடுகளுடன் இத்தகைய மூர்த்திகளை வணங்கி செய்வினைத் துன்பங்களிலிருந்து நிவாரணம் பெறலாம். இந்த விவிதத்ரய சக்திகளைக் கிரகிக்க வல்ல குருமார்கள் தங்கள் சீடர்களின் தலைச் சுழி இரகசியங்களை உணர்ந்து அவர்களை முறையாக வழி நடத்தி இப்பிறப்பிலும் இனி வரும் பிறவிகளிலும் அவர்களுக்கு உயர்ந்த வாழ்க்கையைத் தேடித் தருவார்கள். எனவே, இதுவரை இத்தகைய குருமார்கள் அமையப் பெறாதோர் இனி வரும் பிறவிகளிலாவது அந்தக் குருமார்களைப் பெற திருஅண்ணமலையைத் தொடர்ந்து கிரிவலம் வந்து பிரார்த்தனை செய்யவும். அதுவரை விவிதத்ரய சக்திகளை வாரி வழங்கும் வள்ளலாக அருள்பாலிப்பவரே திருவாசி சகஸ்ர லிங்க மூர்த்தி ஆவார் வளர் பஞ்சமி திதியில் திருவாசியில் அமைந்துள்ள சகஸ்ரலிங்க மூர்த்தியின் முன் அமர்ந்து தங்கள் பெயரை வாய்விட்டு ஓதுதலால் தங்கள் பிறவி பற்றிய இரகசியங்களை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் கனிந்து வரும். இவ்வாறு தொடர்ந்து திருவாசி திருத்தலத்தில் வழிபாடுகளை இயற்ற முடியாவிட்டாலும் முதலில் திருவாசி சகஸ்ரலிங்க மூர்த்தியின் முன் அமர்ந்து தங்கள் பெயரையே திரும்ப திரும்ப வாய் விட்டு ஒலித்து பின்னர் தங்கள் இல்லத்திலோ அல்லது தங்கள் சொந்த ஊரில் உள்ள திருத்தலங்களிலோ வழிபாடுகளைத் தொடரலாம். #🙏ஆன்மீகம்
🙏ஆன்மீகம் - ShareChat