டெல்லி - இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு, மும்பை - பருத்தி ஜவுளி ஏற்றுமதி ஊக்குவிப்பு ஆணையம், மும்பை - செயற்கை மற்றும் தொழில்நுட்ப ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கழகம், விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி ஆணையம், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம், தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகம், இந்திய தொழில் கூட்டமைப்பு - தமிழ்நாடு ஜவுளிப் பிரிவு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், கரூர் ஜவுளி உற்பத்தியாளர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், திண்டுக்கல் - தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம், கோவை - தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம், மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு, இந்திய ஜவுளி கூட்டமைப்பு, ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கம், திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம், இராஜபாளையம் நூற்பாலைகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து, 29.1.2026 அன்று கோயம்புத்தூர் மாநகரின் கொடீசியா வளாகத்தில், நடைபெற்ற "முதலாவது சர்வதேச ஜவுளித் தொழில் மாநாடு 360”-இல் “ஜவுளி நிறுவனங்களுக்கு, அதிநவீன நெசவு மற்றும் பின்னலாடை இயந்திரங்களை கொள்முதல் செய்ய 20 விழுக்காடு மூலதன முதலீட்டு மானியம் வழங்கப்படும், இதற்காக ஆண்டுதோறும் 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்றும், "நூற்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 6 சதவிகிதம் வட்டி மானியத் திட்டம் விரிவுபடுத்தப்படும்" உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தமைக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
#📺வைரல் தகவல்🤩


