SIVAKUMAR M
காவிரி டெல்டா விவசாயிகளைக் காக்க சிறப்புத் திட்டம் தேவை - பா.ம.க தலைவர் வலியுறுத்தல்!
கர்நாடகத்திடமிருந்து காவிரி நீர் கிடைக்காததாலும், மேட்டூர் அணையில் நீர்மட்டம் சரிந்துள்ளதாலும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது; சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் விவசாயிகளுக்குப் பெரும் பொருளாதார இழப்பும், மாநிலத்தில் அரிசித் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. இதனைத் தடுக்க, மத்திய அரசு மூலம் கர்நாடகத்திடமிருந்து தண்ணீரைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதோடு, சம்பா தொகுப்பு நிதியாக ஏக்கருக்கு ரூ.10,000 வழங்கவும், சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் டெல்டா மாவட்டங்களை வறட்சிப் பகுதிகளாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்கவும், நியாயவிலைக் கடைகள் மூலம் மலிவு விலையில் அரிசி விநியோகிக்கவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சிறப்புத் திட்டத்தை வகுக்க வேண்டுமென பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
#CauveryDelta #FarmersProtest #AnbumaniRamadoss #TamilNaduFarmers #Agriculture #CauveryWater #DeltaFarmers #📺அரசியல் 360🔴 #😁தமிழின் சிறப்பு #📺வைரல் தகவல்🤩 #🤝பா.ம.க #👨🦰தளபதி விஜய்