ShareChat
click to see wallet page
search
#Today Gospel ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை. ( பிரசங்கி 12 : 7 ) இறந்த பின்பு உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழ பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்? ( பிரசங்கி 3 : 21 ) கர்த்தருடைய பிள்ளைகளுக்கு அவர்கள் பலமே அவர்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவி தான். ஆனால் அநேகர் அதனை போஷிக்காமல் 24 hrs மண்ணுக்குப் போகிற சரீரத்தைப் பற்றியே சிந்தனை. சிம்சோனை நினைவில் வையுங்கள். பரிசுத்த ஆவி மூன்று முறை பலமாய் இறங்கிற்று, அப்போது அசாத்தியமான காரியங்களை நடப்பிக்கிறான். நியாதி 14 : 6 , 15 :14 ஆனால் மீறுதலுக்கு உட்படும் போது பரிசுத்த ஆவி தன்னை விட்டுப் போவதை அறியதிருந்தான் நியா 16:20, சாமூவேலால் அபிஷேகம் பெற்ற சவுலுக்கும் அதான் நேர்ந்தது 1 சாமூ 16:14. காரணம் பரிசுத்த ஆவியை அவர்கள் துக்கப்படுத்தினார்கள். ஆவியானவர் நாம் வாழும் விதத்தை பரலோகத்தில் சாட்சி கொடுக்கிறவர் என்பதை மறக்காதீர் ரோமர் 8:16 ஆம் பூமியிலும், பரலோகத்திலும் நம்மோடு பயணம் செய்து நம்மைப் பற்றிய சாட்சி கொடுப்பது பரிசுத்த ஆவி மட்டும் தான் 1யோவான் 5 : 7, 8 ) பரிசுத்த ஆவியை உயிர்ப்பிக்க தாவீதைப் போல மன்றாடி அழுது கேளுங்கள். சங்கீதம் 51 முழு அதிகாரமும் அதற்கு தான். "உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்." ( சங்கீதம் 51 : 11 )
Today Gospel - ShareChat
00:06