சென்ற முறை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு சென்ற போது வழக்கம் போல் அங்குள்ள அரசமரத்தடியில் நின்று சிவபெருமான் பாடல் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்படியே மிக உயரத்தில் பூமி மீது நான் மட்டும் நின்று கொண்டு சர்வே செய்வது போல் பாடிக்கொண்டிருப்பது போன்ற ஒரு பாவனை ஏற்படும்!!😄😂. அன்றைக்கு ஒரு கான்க்ரீட் கல் ஒன்றை கட்டை விரலால் மிதித்துக் கொண்டிருந்ததை கவனிக்க வில்லை. சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கல் கரைந்தே போனது! அப்போது எனக்குத் தோன்றியது: இது போல் எனக்கெதிரான ஆணவமும் கரைந்து விட்டதோ?! நான் உடனே கூறினேன் - "ஆணவத்தை காலில் மிதிக்கும் அளவுக்கு நான் சிவன் இல்லை; அதை நீயே செய்!!" அப்போது இந்த பாடல்/ கதை ஞாபகத்திற்கு வந்தது!!
*****************************************""""""********* ஜெயதேவர் அஷ்டபதி "நிந்ததி சந்தனம்" மனதை அப்படியே உருக்கும் ஒரு பாடல். நான் சமீபத்தில் கேட்ட போது கண்ணில் பொல பொலவென்று கண்ணீர் கூட வந்து விட்டது!! இந்த பாடல் பிரேமை என்ற மிகவும் உயர்ந்த ஆன்மீக நிலையை சார்ந்தது. இது இறைவனை அடைய பாடும் திருப்பாவை போன்றதல்ல!! இறைவனை அடைந்த பிறகு வரும் பிரிவாற்றாமையால் பாடுவது!! இதைப் பற்றி பிறகு பார்ப்போம். இந்த பாடல் ஏன் இவ்வளவு உருக்கத்தை தருகிறது?! இந்த பாடலின் ராகம் ஒரு வேளை அத்தகையதோ? என்று பார்த்தால் எனக்கு மிகவும் பிடித்த "தர்பாரி கனடா" என்ற ஹிந்துஸ்தானி ராகம் (என்னிடம் இருக்கும் மிகப் பிடித்த பாடல்கள் அனைத்தும் இந்த ராகமே!!). உடனே, மற்ற வேறு ஏதாவது பேமஸான பாடல் இருக்கிறதா என்று பார்த்த போது, இந்த பாடல் மற்றும் படம் பற்றி தெரிய வந்தது!! -----"O Duniya Ke Rakhavale" (Baiju Bawra)
---- ஓ துனியா கே ராகாவாலே என்று தொடங்கும் ஒரு அற்புதமான பாடல்!! படம் பைஜு பாவ்ரா. கண்டிப்பாக இந்த பாடலை கேளுங்கள்: https://youtu.be/WQ7SalrDbos?si=nwRx0apx-l8nCUIm
*************************************************இந்த படத்தின் கதை என்னவென்று பார்த்தால் அதை விட சுவாரசியம். அற்புதமான படம். இதை இப்போது சஞ்சய் லீலா பன்சாலி மீண்டும் பிரம்மாண்டமான படமாக எடுக்கவிருக்கிறார் என்று தெரிகிறது!! **************************************************. படத்தின் கதைக்கு முன்பாக ஏன் இதை எழுதுகிறேன் என்று சில விஷயங்கள். நான் கோவிலுக்கு சென்றாலே ஒரே பிராப்ளமாக இருக்கிறது. கோவிலில் தேவாரம் பாட்டு பாடினால் கூட இங்கே பாடக்கூடாது என்று ஆணவம்!! கோவிலுக்கு செல்வது இது போல் பல காரணங்களால் போர்க்களம் செல்வது போல் ஆகி விட்டது!! இதற்கு என்னுடைய முக்கிய சில கொள்கைகள் கூட காரணம். அவற்றை மாற்றிக் கொள்ளும் எண்ணம் துளியும் இல்லை: ************* 1. யாரையும் கடவுளாக ஏற்றுக் கொள்ள முடியாது (மனிதர்கள் கடவுளாக முடியாது என்பது சைவ சித்தாந்த சமயத்தின் முக்கிய கொள்கை). 2. "ஆன்மீக வாழ்வில் ஒரு கட்டத்தை அடைந்த பிறகு கோவிலுக்கு செல்வது தேவையில்லை" என்ற சனாதன கொள்கையை, ஸ்ரீராமகிருஷ்ணரின் வாக்கை கடுமையாக எதிர்க்கிறேன். சைவத்தில் முக்தியில் கூட ஐக்கியம் கிடையாது; அப்போதும் நாம் சிவபெருமானின் அடியவர்களே. 3. கோவிலுக்கு சென்று பாடல் பாடி இறைவனை அடைய முடியாது என்று ஒரு கும்பல் கிளம்பி இருக்கிறது (ஏன் ஸ்ரீராமகிருஷ்ணர் இறைவனை அடைய வில்லையா?!😄). இது போன்ற பல விஷயங்கள். முக்கியமாக கோவிலில் அர்த்த மண்டபம் முன்பாக பாட்டு பாட கூடாது என்பது ஆணவத்தின் உச்சகட்டம்; Reflection of an Evil Power. இந்த ஆணவத்தை தான் அழிக்க கரைக்க வேண்டும்!! அது சரி, படத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?! ஏன் இந்த பாடல் காலில் கல் கரையும் போது தோன்றியது?! ஏனென்றால் இந்த படத்தின் கதையே இது தான்!! 😄😄😂. ************************************************* இந்த படத்தில் மேற்கண்ட பாடல் வரும் கட்டத்தை பார்ப்போம். பைஜு என்று ஒரு சாதாரண பாடகர். தான்சேன் என்பவர் அக்பர் அரசவையில் உள்ள புகழ்பெற்ற பாடகர். தான்சேன் தான் தான் பெரிய பாடகர் என்ற மிக்க ஆணவம் கொண்டவர். ஆக்ரா தெருக்களில் கூட யாரும் பாடல் பாடக் கூடாது; பாடினால் பாடல் புனிதம் கெட்டு விடும்; அரசவையில் நான் பாடுவதை கேட்டுக் கொள்ளுங்கள் என்று, யாராவது ஆக்ரா தெருக்களில் பாடினால் கூட தண்டனை என்று அறிவிக்கிறார்!! 😄 பைஜுவின் தந்தை இறப்பதற்கும் தான்சேன் காரணமாக, அதற்கு பழிவாங்க பைஜு துடிக்கிறார். இசையில் தான்சேனை தோற்கடிப்பதன் மூலம் பழிவாங்கலாம் என்று முடிவு செய்கிறார். "என் மீதுள்ள அதீத காதலால் பழிவாங்கும் முயற்சி தடைபடுகிறது; ஆகையால் நான் பிரிகிறேன்" என்று காதலி பிரிந்து சென்று விடுகிறாள். ஒரு கட்டத்தில் காட்டுக்கு சென்று அலைகிறார்; காதலியையும் இழந்து, பழிவாங்கவும் முடியாமல் சிவபெருமானை பார்த்து பாடுவது தான் தர்பாரி கனடா ராகத்தில் அமைந்த இந்த பாடல். பாடல் வரிகள்: "உலகத்தை காக்கும் இறைவா, என் நிலையையும் சற்று நினைத்துப் பார்; எனக்காக நீ சிறிது கண்ணீர் சிந்து!! .... உன்னுடைய கோவில் இடிந்து விட்டால் கூட மீண்டும் கட்டிக் கொள்ளலாம். என் இதயம் உடைந்தால் உன்னால் மீட்க முடியுமா?!"😄 என்றெல்லாம் பாடல் போகிறது!! இந்த பாடலை பாடியவுடன் சிவபெருமானின் கண்ணிலிருந்து கண்ணீர் வருகிறது!! இதைக் கண்டு பரவசநிலையை அடைந்த பைஜு இந்த பாடலை மெய்மறந்து பாடிக்கொண்டே ஆக்ரா வீதிகளில் வருகிறார். வீதிகளில் பாடல் பாடியதால் கைது செய்து அக்பரிடம் அழைத்து செல்கின்றனர். அங்கு "தான்சேன் யார் நான் பாடக்கூடாது என்று சொல்வதற்கு?!" என்று தான்சேனை இசைப் போருக்கு பைஜு அழைக்கிறார். ஒரு கல்லை வைத்து யார் பாடினால் இந்த கல் கரைகிறதோ அவர் தான் வெற்றி பெற்றவர் என்று அக்பர் முடிவு செய்கிறார். கடைசியில் பைஜு பாடிய பாடலில் கல் கரைந்து போகிறது!! 1952ல் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம். இந்த பாடல் சட்டென்று அன்றைக்கு நினைவுக்கு வந்தது!! சிவபெருமானால் எனக்கு எதிரான அனைத்து ஆணவங்களும் அழிக்கப் படும் என்பதில் எனக்கு ஐயமில்லை!! 😄😂 இந்த ஆணவங்களால் என் ஆன்மீகத்தை எதுவும் செய்ய முடியாது!! ************************************************ #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
![ஆன்மீக வாழ்க்கை - BAGLE 8 ؟ Duniya 0 ಅ೯ಾ BdtuBawza] BAGLE 8 ؟ Duniya 0 ಅ೯ಾ BdtuBawza] - ShareChat ஆன்மீக வாழ்க்கை - BAGLE 8 ؟ Duniya 0 ಅ೯ಾ BdtuBawza] BAGLE 8 ؟ Duniya 0 ಅ೯ಾ BdtuBawza] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_436385_a55cd79_1768088430434_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=434_sc.jpg)

