#💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💖நீயே என் சந்தோசம்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ ஒளியில் விஞ்ஞானம்..!*
*50.நீரின்றி அமையாது உலகு..!*
*கப்ளிசேட்*
🔮⚖️
*வானத்திலிருந்துஅளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம். அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள்.*
*(திருக்குர்ஆன் 23:18)*
*"உங்களில் அழகிய செயல்பாடுகள் உள்ளவர் யார்?' என்பதைச் சோதிப்பதற்காக அவனே வானங்களையும்,பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனது அர்ஷ் தண்ணீரின் மீது இருந்தது. "மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப்படுவீர்கள்'' என்று நீர் கூறினால் "இது தெளிவான சூனியமே அன்றி வேறில்லை'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.*
*(திருக்குர்ஆன் 11:7)*
நீரே உலகின் 79% ஐ ஆக்ரமித்துள்ளது.
மீதமுள்ள 21% நிலமாக உள்ளது.
இதிலும் 79% நீரில் நல்லநீர் வெறும் 3% மட்டுமே.
பூமியில் இருக்கும் நீரின் ஆதாரம் (Feeder) என்ன?
நீர் பூமியிலேயே தோன்றியதா?
அல்லது பூமிக்கு நீர் எங்கிருந்து எப்படி கிடைத்தது?
இதில் 97% உப்புநீராகும்.
இந்த 3% நன்னீரில்
பனிப்பாறைகளும்,
பனிக்கட்டிகளும் உருகி 69% நல்ல நீர் கிடைக்கிறது.
நிலத்தடியில் இருந்து 30% நீர் கிடைக்கிறது.
1% நீர் ஏரிகள், ஆறுகள்,சதுப்பு நிலங்கள் ஆகியவற்றில் இருந்து கிடைக்கிறது.
மொத்த நன்னீரில்
ஆறுகள், கிணறுகள், ஏரிகள் என மிக குறைந்தளவு நீரே உள்ளது.
நாம் காணும் மிகப்பெரிய ஆறுகள்,
ஏரிகள், மிகப்பெரிய நீரூற்றுகள், ஏராளமான கிணறுகள்,
குளங்கள் போன்றவைகள் உலகிலுள்ள நீரில் 1% என்று கூறப்படும் போது மற்ற நீரின் பிரமாண்டங்களை புரிந்து கொள்ளலாம்.
நிலத்தடி நீர் , ஆறுகள், குளங்கள்
ஏரிகள், கிணறுகள்
நிரூற்றுகள் என அனைத்திற்குமான நீர் ஆதாரங்கள் என்ன?
அது இயற்கையாக பூமியில் உருவாகிறதா என்று ஆராயும்போது, பல ஆச்சரியமான தகவல்கள் கிடைக்கின்றன.
கடல் நீரின் பரப்பு 97% எனும்போது, அதன் பரப்பளவு 1,49,400,000 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.
இதில் பசிபிக் பெருங்கடல் 35.25%,
அட்லாண்டிக் பெருங்கடல் 20.09%,
இந்துமகா பெருங்கடல் 14.65%,
மீதமுள்ள கடல்பரப்புகளை சிறு கடல்கள் ஆக்ரமித்துள்ளன.
பூமியுள்ள கடலின் நீரின் அளவு 1.3×10(18) டன் என்று கூறுகிறார்கள்.
நன்னீர் அளவில் பனிக்கட்டி/பனிமலை
69% ,நிலத்தடி நீர் 30.1%, மேற்பரப்பு நீர் 0.3%, மற்றவை 0.6% எனவும் கூறப்படுகிறது.
மேற்பரப்பு நீரில் ஏரிகள் 87%, சதுப்பு நிலங்கள் 11%, ஆறுகள் 2% கொண்டதாக உள்ளன.
மொத்த உத்தேச நீர் அளவு 326,000,000 மில்லியன் (மூன்று மடங்கு)கன அடிகள் ஆகும்.
இதுபோன்ற இந்த பூமியை சூழ்ந்துள்ள நீரின் அளவுகள் இன்னும் துல்லியமாக கணக்கிடப்
பட்டுள்ளன.
பூமியின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதுபோல, பூமியின் கீழ்ப்பரப்பிலும் பெரிய ஆறுகளும், ஏராளமான தண்ணீரும் உள்ளன.
கடல்நீர் மணல் வழியாக கீழே இறங்கி அதுதான் நிலத்தடி நீராக சேமிக்கப்படுகிறது என்று நீண்ட காலங்களாக நம்பப்பட்டது.
கடல்நீர் நிலத்தடி நீராக சேமிக்கப்பட்டால், நிலத்தடி நீரும் கடல் நீரைப் போல எப்போதும் குறையாமலும் இருக்கவேண்டும்.
ஆனால் அதுபோல இல்லாமல் பல நகரங்களில் நிலத்தடி நீர் இல்லாமல் ஆகிவிட்டதால், நிலத்தடி நீருக்கும், கடல் நீருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிய முடிகிறது.
வானிலிருந்து பெய்யும் மழையே பூமியில் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீராக இருக்கிறது என்று கி.பி 1580 ஆம் ஆண்டுகளில்
நீரியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள்.
இதனால்தான் கடற்கரையிலேயே இருக்கும் ஊற்று நீர் உப்பாக இருப்பதில்லை.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமி நெருப்புக் கோளாக இருந்த போது, இதிலிருந்து வெளியான நீராவியும்,
வாயுக்களும், வளிமண்டலத்தில் நிறைந்திருந்தது.
பின்பு பூமி குளிர்ந்தபோது, வளிமண்டல
நீராவியும் குளிர்ந்து மழையாக பொழிந்தது.
பூமியின் தாழ்வான பகுதிகளில் பெய்த மழையால் ஏரிகளும்,
கடல்களும் உருவாயின.
கடும் வெப்பமான பூமி மீது
விண்வெளியில் நிறைந்துள்ள ஆஸ்ட்ராயிடு என்ற நீர் நிறைந்த விண்கற்களும்,
பனிப்பந்து,வால் நட்சத்திரங்களும்
தொடர்ந்து மோதி பெரும் வெள்ளத்தை பூமிக்கு கொண்டு வந்து கடல் உருவானதாக கூறப்படுகிறது.
வானத்திலிருந்து தண்ணீர் வந்தால் கடல் மட்டும் ஏன் உப்பாக இருக்கிறது என கேள்வி எழுகிறது.
பலகோடி ஆண்டுகளாக ஆறுகள் மூலமாக நிலத்திலிருந்து கடலுக்கு அடித்து வரப்படும் கனிமங்கள், மற்றும் உப்புக்கள், கடலில் சேர்ந்து நீர் ஆவியாகும் போது,
இவைகள் கடலில் தங்கி விடுவதே காரணமாகும்.
சிறிதளவு உப்புத்தன்மை உள்ள மழைநீர் பாறைகளில் உள்ள சோடியம்,
குளோரைடு ஆகிய கனிமங்களை கடலில் சேர்ப்பதால்
கடல் நீர் உப்பாக இருக்கிறது.
கடலில் சேரும் உப்புகளின் நிலைக்கேற்பவே கடலின் பல பகுதிகளில் உப்பின் அளவில் மாறுபாடுகள் இருக்கின்றன.
பல மில்லியன் ஆண்டுகளாக கடலில் உப்புகள் சேர்ந்து கடல் உப்பு மயமாக இருக்கிறது.
அவனது அர்ஷ் தண்ணீரின் மீது இருந்தது என்ற திருக்குர்ஆன் வசனமும், தண்ணீர் வானித்திலிருந்தே இறங்கியது என்று கூறுகிறது.
ரிக் வேதம் கிரேக்க புராணங்கள், புதிய ஏற்பாடு என்று அனைத்து மத நூல்களும் தண்ணீர் வானத்திலிருந்து
தான் இறங்கியது என்று கூறுகின்றன.
வானிலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம்.அதை பூமியில் தங்க வைத்தோம் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
ஆகவே இன்றும் நீர் ஆவியாகி மேகமாகி குளிர்ந்து மழையாக பொழிவதே பூமிக்கான நீர் ஆதாரமாகும்.
மழை பொய்யாத பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து இன்று பல நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதை காணலாம்.
திருக்குர்ஆனின் ஒளியில் விஞ்ஞானம்..!
*50 நாட்கள், 50 தலைப்புகளில் எழுதிய இந்த தொடரை இன்றுடன் நிறைவு செய்கிறேன்*.
ஏராளமான ஆய்வுக்
கட்டுரைகளை மிக விரிவாக எழுத வேண்டும்.
சிறிது இடைவெளி விட்டு இறைவன் நாடினால் தொடர்கிறேன்.
🔮⚖️
*கப்ளிசேட்*
*26.01.26*


