ShareChat
click to see wallet page
search
முதல் பொருளே விநாயகனே! வினை தீர்ப்பவனே! முழுமுதற் கடவுளே எமைக் காப்பாய் விநாயகனே! ஒற்றைக்கொம்பு உடையவனே! ஓங்கார உருவனே! தும்பிக்கை நாதனே! துயரம் தீர்ப்பவனே! முறுக்கு மீசை கொண்ட ஈஸ்வரனே! என் குல ஆண்டவனே! உன்னை வணங்கி நிற்கிறோமே! ஆவேசம் கொண்டவனே! ஆலயத்தில் சிறந்தவனே! ​ சங்கரனே இல்லத்தில் உறைபவனே எண்ணற்ற இன்பங்கள் தருபவனே ஈஸ்வரனின் இடப்பாகம் அமர்ந்தவளே ஈஸ்வரி தாயே! இதயத்தில் வாசம் செய்பவளே இன்பங்கள் யாவும் உன் அருளாலே! ஓம் சக்தி ஓம் சக்தி தாயே இன்னல்கள் தீர்ப்பாயே ஓம் சக்தி ஓம் சக்தி தாயே சிவனே ஆதிப் பொருளே! எம் சிந்தை தெளிய வைக்கும் பரம்பொருளே! சந்தனமும் திருநீரும் அபிஷேகமா சங்கரரே சங்கமிக்கும் நாள்தான் ஐயா சிவபெருமானை நாடி வரும் அன்பனுக்கும் நண்பனே! வாசலில் வந்து நின்று வரம் கொடுக்கும் வள்ளலே ​ இறைவனின் வாகனமே நந்தியம்பெருமானே! நாளும் எங்களுக்கு நல்லது செய்திடுவாயே! விண்ணைத் தொட்டு நிற்கும் கொடிமரமே! உன்னைப்போல உயருமே என் வாழ்வே! அண்ணார்ந்து பார்த்து உன்னை தொழுதேனே அருளைப் பொழிந்து என்னை காப்பாயே வில்லேந்தும் ராமபிரான் சீதையுடனே! நல்லருள் புரிவாரே நம் நெஞ்சில் நிலையாகவே! மங்கலங்கள் தந்திடுவார் மங்கை சீதையுடனே! எம் மனக்கவலை தீர்ப்பாரே ரகுராமன் துணையுடனே! ஆறு முகம் கொண்ட சண்முகனே! அள்ளித் தரும் தெய்வமே! வள்ளி தெய்வானையோடு காட்சி தாராரே! வடிவேலன் வடிவில் வந்து எம் வாழ்வு காப்பாரே! ​ நவக்கிரக நாயகரே நல்லருள் புரிவாரே! நாளும் எமைக் காக்க துணையாய் வருவாரே! வெட்டருவா மீசை வச்சிக்கிட்டு ஒய்யாரமா நிற்காரே! உன் சன்னதியில் காவல் தெய்வம் சுடலைமாடன் தானய்யா! தோளில் அருவா ஏந்திக்கிட்டு துணையாய் நிற்க வாராரே! வாராரே மாடன் வாராரே! ​ உன் தாழ் தேடி வந்ததால் காலம் நேரமும் கூடி வந்ததே! என் புகழும் பாடிடுவேன் என் ஜென்மங்கள் உள்ளவரை! நீயே காவலனே! என் குல ஆண்டவனே உன்னை வணங்குகிறோமே! ​ ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... செல்வா ✍️ #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏அயோத்யா ராமர் கோவில் #பக்தி