ShareChat
click to see wallet page
search
🧡ஒரு நாள் சூரி நாகம்மா,பகவானை வணங்கியப் போது நடுங்கிய குரலில் பகவானே...!நான் முக்தியடைய வழிக் காட்ட வேண்டும், என்றார். 🧡கருணையே உருவான பகவான், திரும்பி,அவரை நோக்கி தலையை அசைத்து ஒப்புதல் அளித்தார். 🧡பகவானின் இச்செயல் விசித்திரமானதாக இருந்தது. 🧡ஏனென்றால் இத்தகைய கேள்விக்கு எதிர்க்கேள்வியாக,யார் முக்தியை விரும்புகிறார்❓ 🧡யார் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்❓ 🧡என்பதாகவோ,அல்லது மௌனமாகவேத்தான் இருக்கும் அவரது பதில். 🧡இதுப்பற்றி நாகம்மா எச்சம்மாளிடம் கூறியப் போது, நீ எத்தனை பாக்கியசாலி! 🧡பகவான் விரைவிலேயே உனக்கு அபயம் கொடுத்துள்ளார்,என்று எச்சம்மாள் கூறினார். 🧡அவர் கூறியதன் பொருளென்ன❓ என்று நாகம்மா வினவியப் போது 🧡இப்போதிலிருந்து உனக்கு பிறப்பும்,இறப்பும் இல்லை. 🧡பகவான் உன்னை ஏற்றுக் கொண்டு விட்டார். 🧡உனக்கு இனி பயம் இல்லை. அதுவே தான் உனக்கு முக்தி என்று விளக்கிக் கூறினார். 🧡பகவான் தன் முழு கவனத்தையும் நாகம்மா மீது செலுத்தினார். 🧡ஒரு நல்ல மாணவியைப் போன்று அவரும்,பகவானுடைய உபதேசமான ஆத்ம விசாரத்தில் மூழ்கினார். 🧡அவ்வப்போது அவரால் ஆழ்ந்த தியானத்தில் இருக்க முடிந்தது, என்றாலும்,இடையிடையே அவரை எண்ணங்களும் திசை திருப்பின. 🧡குறிப்பாக பகவான் முன் அமர்ந்து கண்களை மூடி தியானிக்கும் போது,இந்த எண்ணங்கள் என்னை சூழ்ந்துக் கொள்ளும். 🧡நான் கண்களை திறந்துப் பார்த்தால் பகவானுடைய கவனம் என் மீது பதிந்திருக்கும்,என்று கூறியதோடு எனது எண்ணங்களையெல்லாம் பகவான் விரட்டினார்,என்று தெரிவித்தார். 🧡நாகம்மா இயற்கையாகவே சிறந்த கவியாகவும்,எழுத்தாளராகவும் இருந்தார். 🧡பகவான் தடைகள் ஏதும் பிறப்பிக்காதப் போதும்,அந்த நாட்களில்,பெண்கள் பகவானை அணுகி சகஜமாக பேசத் தயங்குவார்கள். 🧡கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில்,அது மேலும் கடினமாக இருக்கும். 🧡அத்தகைய தினங்களில்,தியானம் பற்றித் தனக்கு அவ்வப்போது எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் கோரி, நாகம்மா,பகவானுக்கு ஒரு சீட்டு எழுதி அனுப்பி வைப்பார். 🧡அந்த சந்தேகங்களையெல்லாம் நீங்கள் எதற்காக கவனிக்கிறீர்கள்❓ அவ்வாறு செய்வாதால் நீங்களே அவற்றிற்க்கு சக்தி அளிக்கிறீர்கள்,பதிலாக இதயத்தில் ஆழ்ந்து மூழ்குங்கள்,என்று பகவான் அவரை கடிந்துக் கொள்வார். 🧡ஒவ்வொரு முறையும் என்னைப் பார்த்து,என்னுடைய அக நோக்கை வலுப்படுத்தியப் போது, சுற்றி வளைக்காமல்,நேரடியாக அதை நிலைப்படுத்தினார். 🧡பகவான்,அது காய்ந்து போன நிலத்தில் தண்ணீர் பாய்ந்து, பூக்களை மலர்விப்பது போன்று இருந்தது. 🧡என்னுடைய ஆன்மீக வாழ்கை அத்தகையது என்று கவிதை நடையில் சூரி நாகம்மா கூறுவார். 🚩🕉🪷🙏🏻 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #சித்தர்கள் வாக்கு #மண்ணில் வாழ்ந்த மகான்கள்
பகவான் ரமணர் - ShareChat