பொதுவுடைமையின் தத்துவ மேதை காரல் மார்க்ஸ் அவர்களுக்கு சிலை திறப்பு
கார்ல் மார்க்ஸ் (Karl Marx) சிலை, சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா பொது நூலக (Connemara Public Library) வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
பிப்ரவரி 6, 2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சுமார் ₹85.80 லட்சம் செலவில் இந்த முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 3, 2025 அன்று தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் இந்தச் சிலை அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
கார்ல் மார்க்ஸ் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை நூலகங்களில் கழித்தவர் என்பதால், வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னிமாரா நூலக வளாகத்தில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிலை திறப்பு விழாவின் போது கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் சிறப்பு புகைப்படக் கண்காட்சியும் அங்கு நடைபெற்றது.
#KarlMarx | #Statue | #🤳மொபைல் போட்டோகிராபி #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்


