ShareChat
click to see wallet page
search
மதுமலர் நிறைகொடி கையிலேந்தும் மாட்சிமை நிறை சூசை மாமுனியே துதி வளர் உமது நற்பதம் வந்தோம் துணைசெய் தெம்மையாளும் தாதையரே #தொழிலாளர்களின்_பாதுகாவலரான_புனித_சூசையப்பரே... #எங்கள்_குடும்பத்தையும்_தொழிலையும்__ஆசீர்வதியும். பிதா சுதன் பரிசுத்த ஆவியாரின் திருப்பெயராலே ‌‌...ஆமென். #புனித_சூசையே... எங்கள் குடும்பத்தின் பாதுகாவலரே... இன்று எங்கள் குடும்பத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன். எங்கள் குடும்பங்களை ஆசீர்வதியும். உம் திருமகன் இயேசுவுக்கு நாங்கள்... சாட்சியாக வாழ வரம் தாரும். #தூய_வளனாரே... எங்கள் குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றத்தை கொடையென பெற்றுத் தாரும். நோய் நெடி பேராபத்துகளில் இருந்து எங்களை பாதுகாத்தருளும். நலிவுற்றுள்ள எங்கள் தொழில்கள் செழிக்க எங்களுக்காக இயேசுவை மன்றாடும். #திருக்குடும்ப_காவலரே... படிக்கின்ற பிள்ளைகளுக்கு நல்ல ஞானத்தையும் ...ஞாபக சக்தியை தாரும். எங்கள் சிறு பிள்ளைகள் கடவுளுங்கு அஞ்சி நடக்கவும்... ஒழுக்கத்தில் சிறந்து வளர ஆசீர்வதியும். திருமணதிற்காக காத்திருப்போருக்கு நல்ல மண வாழ்க்கையையும்... அவர்கள் சந்ததி கடற்கரை மணலைப் போல் பழுகி பெருகச் செய்யும்‌ #புனித_சூசையே... எங்கள் வாழ்வின் எல்லா இன்ப துன்ப நேரத்தில் துணையாக இருக்கும்படியாக உம்மை கெஞ்சி மன்றாடுகின்றேன். #ஆமென்_1பர_1அருள்... #✝️இயேசுவே ஜீவன்
✝️இயேசுவே ஜீவன் - ShareChat