ShareChat
click to see wallet page
search
https://youtube.com/watch?v=-rDYVf2nVV4&si=RPO4uSxC-3NkJ33k போதைப் பொருள் புழக்கத்திற்கு எதிராக திருவண்ணாமலையில் தேசிய ஜனநாயக கூட்டணி போராட்டம் தி மு க அரசுக்கு கடும் எச்சரிக்கை தமிழகத்தில் போதைப் பொருட்களின் அதிகரித்துவரும் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக குற்றம் சாட்டி, திமுக அரசை கடுமையாக விமர்சித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கலந்து கொண்டு உரையாற்றினார் அவர் தனது உரையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கஞ்சா மற்றும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. பள்ளி கல்லூரி வளாகங்களுக்குப் பின்னாலும் கூட இவை எளிதில் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது இது சமூகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அரசு கண்மூடித்தனமாக செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார் மேலும் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மக்களின் உணர்வுகளை மதிக்காத ஆட்சி நீடிக்காது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் கிரிவலப் பாதையில் உள்ள டாஸ்மாக் கடை அகற்றப்படும் என்றார் போதைப் பழக்கத்தால் இளைஞர்கள் குற்றச்செயல்கள் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து பேசும்போது அந்த விவகாரத்தில் தொடர்புடையவர் யார் என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை உண்மையை வெளிக்கொணர அரசு தயங்குகிறது என்றும் அவர் விமர்சித்தார் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் போதைப் பொருள் தடுப்பு சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும் எல்லை பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் இந்த போராட்டத்தின் போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் சில நேரம் போக்குவரத்து சிரமம் ஏற்பட்டாலும் பின்னர் நிலைமை சீரடைந்தது ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் நவீன் தலைமையில் நடைபெற்றது திருவண்ணாமலை வடக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் சரவணன் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் கே ரமேஷ் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் கவிதா வெங்கடேசன் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஏந்தல் பக்தன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் பரந்தாமன் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ராயர் கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும் அரசு தொடர்பு பிரிவு மாநிலச் செயலாளர் டி அரவாழி மாவட்ட பொதுச் செயலாளர்கள் கவிதா பிரதீஸ் செங்கம் ரமேஷ் டி ஜெய் நாத் மாவட்டத் துணைத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி கலாவதி மாவட்ட பொருளாளர் எஸ் பி கே சுப்பிரமணியம் பிரச்சாரப் பிரிவு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் சி வினோத்குமார் வழக்கறிஞர் பாரதி மாநகரச் செயலாளர் மாந்தோப்பு ராஜா உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர் #📰தமிழக அப்டேட்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰