ரோகித்து சக்கரவர்த்தி வேமுலா (Rohith Chakravarti Vemula, ஐனவரி 30, 1989 – #ஜனவரி_17 , 2016) ஐதராபாத்து பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காக படித்துக் கொண்டிருந்த மாணவர் ஆவார். சனவரி 17, 2016 அன்று அவர் மேற்கொண்ட தற்கொலை நாடெங்கும் கிளர்ச்சியையும் கோபத்தையும் தூண்டியுள்ளது; மீயுயர் கல்வி நிறுவனங்களில் தலித்களுக்கும் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கும் இழைக்கப்படும் அநீதியை வெளிக்கொணருமாறு ஊடகங்களில் பரவலாக பதியப்படுகின்றது. அவரது தற்கொலைக் கடிதத்தின்படி, கல்லூரி தங்குவிடுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அவர் தங்கியிருந்த உம்மா அண்ணா என்பவரின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். #life #lifes


