ஊருக்கு உபதேசம் இவர் வாழ்வது அனைத்தும் இலவசத்திலேயே சாமானிய மக்களுக்கு எதுவும் கிடைக்கக் கூடாது என்று நினைக்கும் இந்த அயோக்கியர்கள் பெற்றுள்ள வசதி வாய்ப்புகளை பாருங்கள். கீழே இவர்கள் பெரும் சலுகைகளை வேண்டாம் என்று கூறிவிட்டு இவர் எது வேணாலும் பேசட்டும்
இலவச குடியிருப்பு:
புது தில்லியில் உள்ள முழுமையாக ஏசி பொருத்தப்பட்ட மிகப்பெரிய குடியிருப்பு.
இலவச பாதுகாப்பு:
அந்த குடியிருப்புக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வழங்கும் ஆயுதம் தாங்கிய உயர்மட்ட பாதுகாப்பு.
இலவச பயணம் மற்றும் போக்குவரத்து:
இலவச ஓட்டுநர்களுடன் கூடிய அதிகாரப்பூர்வ இலவச அரசு வாகனங்கள், முதல் வகுப்பு ஏசி ரயில் பயணங்கள் பணியாளர்களுக்கும் சேர்த்து இலவசம் மற்றும், அதிகாரபூர்வ பயணத்திற்கு செலவான பணத்தை அரசிடம் கோரி திரும்பப் பெறுதல் போன்ற பல இலவச பயணச் சலுகைகள் உண்டு.
இலவச மருத்துவ வசதிகள்:
தலைமை நீதிபதி மற்றும் அவரைச் சார்ந்த குடும்பத்தினர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு உட்பட விரிவான இலவச மருத்துவ சிகிச்சைகள்.
இலவச மின்சாரம், தண்ணீர், தொலைபேசி, கைபேசி, பிராட்பேண்டு இணையம்:
பணிக்காலத்தில்:
தலைமை நீதிபதிக்கு அவரின் அரசு குடியிருப்பில் தொலைபேசி, மின்சாரம், தண்ணீர், கைபேசி டேட்டா இணையம் யாவும் இலவசம்.
ஓய்வுக்குப் பிறகு:
2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிக்கு குடியிருப்பு தொலைபேசி இணைப்பு இலவசமாகவும், குடியிருப்பு தொலைபேசி, மொபைல் போன், பிராட்பேண்ட் அல்லது மொபைல் டேட்டாவிற்கான தொலைபேசி அழைப்புக் கட்டணங்களை மாதத்திற்கு ரூ.4,200 வரை மட்டும் இலவசமாகவும் உண்டு.
இலவச ஊழியர்கள்:
செயலாளர்கள் மற்றும் எழுத்தர் ஊழியர்கள் உட்பட அர்ப்பணிப்புள்ள தனிப்பட்ட ஊழியர்கள் அரசின் சம்பளத்துடன்.
ஓய்வுக்குப் பிந்தைய இலவச சலுகைகள்: குறிப்பிடத்தக்க ஓய்வூதியம் (கடைசியாகப் பெற்ற சம்பளத்திற்குச் சமம்), கூடுதலாக வாழ்நாள் முழுவதும் இலவச பணியாளர்/ஓட்டுநர் சேவைகள். ஓய்வுக்குப் பிந்தைய காலத்திலும் மருத்துவக் காப்பீடு உட்பட விரிவான இலவச மருத்துவ சிகிச்சைகள்.
மேற்கண்ட இலவசங்கள் எல்லாம் தாண்டி...
மாதா மாதத்திற்கு 2,80,000 ரூபாய் சம்பளம். பண்டிகை கால போனஸ். பஞ்சப்படி. இது எலாம் மற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளை விட இவருக்கு அதிகம்.
இப்போது...
இவர் கேட்ட முக்கியமான கேள்விக்கு வருவோம்.
மாதா மாதம் இவர் பெறும் 2.8 லட்சம் ரூபாய் சம்பளம் தாண்டி...
இவர் அனுபவிக்கும் மேற்கண்ட அனைத்தும் இலவசம் எனும் போது...
இது குறித்து... அந்த ஏழை மக்கள் இவரை பார்த்து திருப்பிக் கேட்க மாட்டார்களா..?!அய்யா நீதிபதி அவர்களே "லட்ச கணக்குல சம்பளம் வாங்குறீங்களே அப்புறம் எதுக்குங்க உங்களுக்கெல்லாம் இலவச பங்களா - பங்களாவுல பணி செய்றவங்களுக்கு சம்பளமும் அரசாங்க ( மக்கள் வரி பணம் ) காசுல, இலவச மின்சாரம், இலவச வாகனம் - அந்த வாகனத்துக்கு எரிபொருள் இலவசம் - சுங்க கட்டணம் இலவசம், விமான பயணம், கோவில் வழிபாடுகள்ல சலுகைகள் - முன்னுரிமைகள், இது போக மருத்துவப் படி அது இது ன்னு ஏகப்பட்ட இலவசங்கள், சலுகைகள் லாம் உங்களுக்கு எதுக்குங்க ????.
அதெல்லாம் எங்களுக்கு வேண்டாம், எங்களுக்கு தான் லட்க கணக்குல சம்பளம் வருதில்ல, அதுலேயே பார்த்துக்கிறோம் ன்னு சொல்லுங்க சார் .... லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கு இவர்கள் நாட்டின் நலன் கருதி 10,000 15,000 சம்பளத்தில் வாழ தயாரா? இத்தனை இலவசங்களையும் வேண்டாம் என்று கூறிவிட்டு நாட்டின் நலன் கருதி பத்தாயிரம் மற்றும் 15 ஆயிரம் சம்பளத்துக்குள் வாழ தயாரா?
ஜே அப்துல் சமது #👨மோடி அரசாங்கம்


