"நீங்கள் மாடமாளிகையில் ஆடம்பரமாக கொண்டாட்டத்துடன் இருந்து கொள்ளுங்கள். நாங்கள் பக்கத்தில் சிறு குடிசையில் இருக்க அனுமதியுங்கள்" - இப்படி ஒரு வரி சாந்தாராம் பண்டார்கர் மகராஜ் எழுதிய பாக்கெட் பகவத் கீதை முன்னுரையில் பார்த்தேன்!! நீங்கள் ஆடம்பரமான பிரம்மாண்டமான கோவில்களில் இறைவனை வழிபட்டு கொள்ளுங்கள்; ஆனால் சிறிது எங்களையும் வழிபட அனுமதியுங்கள் என்பது அர்த்தம் என்று நினைக்கிறேன்!! அது போன்ற கன்னட பாடல் இது!! ************************************************ மகாத்மா காந்தி ஒரு முறை பகவத் கீதையை படித்து வியந்து கூறினாராம்: "இந்து மதத்தில் உள்ள அனைத்து நூல்களும், எல்லாமும் அழிந்தாலும் கூட, பகவத் கீதை ஒன்று அழியாமல் இருந்தால் அதுவே போதுமானது"!! நாம் இப்படிக் கூறலாம்: "சைவத்தில் அனைத்தும் அழிந்தாலும் கூட பரவாயில்லை; தேவாரம் திருவாசகம் மட்டும் அழியாமல் இருந்தால் போதுமானது!!". அவற்றை மட்டும் வைத்தே நாம் சிவபெருமானை அடைய முடியும். ஞானத்திற்கு மெய்கண்டாரின் பன்னிரு சைவ நெறி நூல்கள் பின்னாட்களில் இயற்றப் பட்டாலும் ககூட பக்தி பாதையிலேயேயும் கூட ஞானமும் பெறலாம் என்று கூறுபவர்கள் உண்டு. ஆகையால் தேவார திருவாசக பதிகங்கள் நமது பொக்கிஷங்கள். அதை கோவிலில் பாடுவதை எந்த காரணத்தினாலும் தடுப்பது மிகவும் கண்டிக்கத் தக்கது. *******************************************""******** பாடுவது என்ன, கோவிலுக்கு செல்வதையே கூட தடுத்தாலும் எனக்கு கவலையில்லை. என் உடம்பு கோவில்; என் கால்கள் அடித்தளம்; தலை கோபுரம்; இதயத்தில் நீ இருக்கிறாய் என்று நான் உன்னை வழிபடுவேன் என்கிறது இந்த கன்னட பாடல். நமது பூசலார் நாயனார் போன்றது தான். கன்னடத்தில் நமது தேவார பாடல்கள் போன்று பசவன்னா போன்றோர் பாடிய "வசனா" என்ற பாடல் வகை உண்டு. நான் மங்களூரில் வேலை பார்த்த போது, அருகில் இருந்த ஒரு சிவன் கோவிலுக்கு செல்வேன். போகும் போதெல்லாம் கன்னட பக்தி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும். ஒரு முறை பாடல் மிகவும் சிறப்பாக பட அது யார் பாடியது என்று கேட்டு வாங்கிய கேசட் தான் புத்தூர் நரசிம்ம நாயக் என்பவரின் பாடல் தொகுப்பு. கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் கேட்கும் பாடல் (சமஸ்கிருத ஸ்தோத்திர பாடல்) தொகுப்பாக ஆகி விட்டது. இந்த வீடியோவில் ஈசா யோகா வெளியிட்டிருக்கும் இந்த பாடல் கன்னட "வசன" வகையை சேர்ந்தது. இரண்டு மூன்று வரிகளில் அழுத்தமாக பக்தியை, கொள்கையை வெளிப்படுத்தும் பாடல் வகை என்று நினைக்கிறேன். நமது சிவன் கோவில்களில் எத்தனை கோவில்களில் எப்போதும் தேவார, திருவாசக பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறது?!😕😧 முற்றோதலுக்கு மட்டும் தானா?! **********
#ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
https://youtube.com/watch?v=zrkoAw7On0s&si=Dy_9up_pJ8JjUZvq

