11 வருட மெமரி..
துலாமுக்கு செவ்வாய் தரும் யோகம்.
#adityaguruji
#துலாம்
#libra
#TamilArticle
#செவ்வாய்
#mars
#gurujitamilarticle
#ஜோதிடம்
#ஜாதகம்
✨ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி எண் : 8681 99 8888✨
உங்கள் ஜாதகம் யோகஜாதகமா? 50
துலாம் லக்னத்திற்கு செவ்வாய் பகவான் தரும் ருசகயோகத்தின் தொடர்ச்சியை இப்போது பார்க்கலாம்....
துலாம்
மற்றொரு நிலையாக துலாம் லக்னத்திற்கு நான்காமிடத்தில் உச்சம் பெறும் செவ்வாய், ஷட்பலங்களில் முதன்மை மூன்று பலங்களான ஸ்தானபலம், திக் பலம், திருக்பலம் ஆகியவற்றில் திக்பலத்தை இந்த இடத்தில் இழப்பது சிறப்பு.
ஒரு கிரகத்தின் பலத்தை அளவிட நமது ஞானிகள் வகுத்துத் தந்த ஆறுவகை பலங்களில் கீழ்க்கண்ட மூன்று பலங்கள் மட்டுமே முதன்மையானவை. மற்றவை இரண்டாம் பட்சம் தான்.
முதலாவதாக ஸ்தான பலம். (உச்சம், ஆட்சி, நட்பு போன்றது )
இரண்டாவதாக திக்பலம். ( லக்னத்தில் குருவும் புதனும், நான்கில் சந்திரன் சுக்கிரன், ஏழில் சனி, பத்தில் சூரியன் செவ்வாய் இருப்பது)
மூன்றாவதாக திருக்பலம். (அதாவது கணிக்கப்படும் கிரகத்திற்கு கிடைக்கும் பார்வைபலம்.....
அந்தக் கிரகத்தை சுபக்கிரகங்கள் பார்க்கின்றனவா அல்லது அசுப கிரகங்களால் பார்க்கப்படுகிறதா என்பது)
ஆகியவையே முக்கியமானவை ஆகும்.
இயற்கைப் பாவரான செவ்வாய் இந்த இடத்தில் உச்சம் என்ற ஸ்தானபலம் பெற்றாலும் இரண்டாவதான திக்பலம் இழப்பது அவரின் கொடூரத்தன்மையைச் சற்றுக் குறைக்கும்.
இங்கு பலம் பெறும் செவ்வாய் தனது 4,7,8 ம் பார்வைகளால் ஏழு, பத்து மற்றும் பதினோராம் பாவங்களைப் பார்ப்பார். உச்சம் பெற்ற நிலையில் தனது வீட்டைப் பார்ப்பது யோகம்தான் என்று மேலோட்டமாகத் தோன்றினாலும் ஒரு இயற்கைப் பாபர் வலுப்பெற்று ஏழாமிடத்தைப் பார்ப்பது நல்லதுதான் என்று நான் சொல்ல மாட்டேன்.
இந்த நிலையில் வாழ்க்கைத் துணையின் பின்னணி நல்ல நிலையில் இருக்கலாமே தவிர, நல்ல நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என்பது உத்திரவாதம் இல்லை. என்ன இருந்தாலும் செவ்வாய், செவ்வாய்தான்.
தனது ஏழாம் பார்வையால் பத்தாம் இடத்தைப் பார்ப்பது ஜாதகரை ராணுவம், காவல்துறை போன்ற சீருடை அணியும் துறைகளில் பணிபுரிய வைக்கும். காவல்துறையில் இன்ஸ்பெக்டர் நிலைக்கு மேலான உயர் அதிகாரிகளின் ஜாதகங்களில் செவ்வாய் இங்கு இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
மகரச் செவ்வாய் ஜாதகரை கடுமையான போக்குடைய அதிகாரியாக ஆக்குவார். வேலையில் கடினமனம் இருக்கச் செய்வார். ஜாதகர் வேலையில் ஒரு குணம், வெளியில் வேறு குணம் என இரட்டைக் குணநிலை உள்ளவராக இருப்பார்.
லாபஸ்தானத்தைப் பார்ப்பது சிம்மம் அவரது அதிநட்பு வீடு என்பதால் துலாம் லக்னத்திற்கு நல்ல நிலைதான்.
எப்போதுமே சிம்மராசியின் மேல் செவ்வாய்க்கு ஒரு தனிப்பட்ட புரிதல் உண்டு. இந்த பார்வையால் சிம்மத்தின் பாதக வலுக் குறைந்து லாபவலு மேலோங்கும்.
அடுத்து, மகரச் செவ்வாய் உச்சம் பெறும் நிலையில் சூரிய, சந்திர, சுயச் சாரங்களான உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரங்களில் இருப்பார் என்பதால், பாதகாதிபதி சூரியன் மற்றும் மாரகாதிபதி செவ்வாயின் சுயச்சாரம் ஆகியவற்றில் இருப்பதைக் காட்டிலும் பத்துக்குடையவரான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் இருப்பது இந்த லக்னத்திற்கு நன்மையைத் தரும்.
என்னதான் இருந்தாலும் துலாம் லக்னத்திற்கு செவ்வாயின் தசை வருவது நல்லது அல்ல. செவ்வாய் தசை நடப்பில் வராத துலாம் லக்னத்தவர்களே உண்மையான அதிர்ஷ்டசாலிகள்.
மீதி லக்னங்களுக்கு ருசக யோகம் தரும் பலன்களை நாளை பார்க்கலாம்....
🍂அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.🍂 #🔍ஜோதிட உலகம் 🌍 #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻


