ShareChat
click to see wallet page
search
கண்ணு தெரியாத சாபங்கள் தோஷங்களை நீக்கும் குக்கே சுப்ரமணிய சுவாமி 🦚🙏🙏📿 ஓம் சரஹணபவ 🦚 அனைவருக்கும் வணக்கம் 🙏 குணமும் மனமும் தீங்கு செய்யாமல் இருந்தும் இன்று பலருடைய வாழ்க்கையில் கண்ணுக்கு தெரியாத கர்ம வினைகள் முன்னோர்கள் வழிமூலம் தொடர்ந்து பாதிப்பு தருகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் இப்படி கண்ணுக்கே தெரியாமல் சாபத்தை தோஷத்தை அனுப்பவர்களுக்கு வாழ்க்கையே மிகப்பெரிய போராட்டமாக இருக்கும்.. கல்வி தடை, திருமண தடை,பண தடை,வேலை இல்லாத நிலை,புத்திர தோஷம், எவ்வளவு திறமை இருந்தாலும் அதற்கான அங்கிகாரம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படும்... இதற்கு முக்கிய காரணம் உங்கள் ஜாதகத்தில் சந்திரன் ,சனி ராகு சேர்க்கை,ராகு செவ்வாய் சேர்க்கை.. இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு தான் வர வேண்டி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.. இப்படி பட்டவர்களுக்கு தோஷ நிவர்த்தியாக மிகவும் சக்தி வாய்ந்த பரிகார ஸ்தலமாக இருக்கும் கோவில் தான் குக்கே சுப்ரமணிய சுவாமி கோவில் இதை பற்றி தெரிந்து கொள்ள முழுமையாக படிக்கவும்..🙏 🦚தலபெருமை: தமிழகத்தில் பழநி முருகன் கோயில் பிரசித்தமாக இருப்பது போல, கர்நாடக மாநில முருக ஸ்தலங்களில் பிரபலமானது "குக்கி சுப்ரமண்யா' கோயிலாகும். இது பல யுகம் கண்ட கோயிலாகும். கந்தபுராணத்தில் "தீர்த்த சேத்ரா மகிமணிரூபணா' அத்தியாயத்தில் இத்தலத்தை பற்றி கூறப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள குமாரமலைப்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. இயற்கை காட்சிகளை தன்னகத்தே அடக்கியது இம்மலை. 🦚முருகப்பெருமான் தாரகாசூரனை அழித்த பின், தனது வேலில் படிந்திருந்த ரத்தத்தை கழுவ இந்த நதிக்கு வந்தார் என புராணங்கள் தெரிவிக்கின்றன. பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் நீங்க இங்குள்ள தீர்த்தத்தில் நீராடியுள்ளார். ஆதிசங்கரர், மத்வாச்சாரியார் ஆகியோர் இங்கு வந்துள்ளனர். 🦚தல வரலாறு: காஷ்யப முனிவரின் மனைவியரான கத்ரு, வினதா என்பவர்களுக்கு இடையே குதிரைகள் பற்றிய சர்ச்சை எழுந்தது. இருவரும் தங்கள் கருத்தே சரியென வாதம் புரிந்தனர். முடிவில், யாருடைய கருத்து சரியானதோ, அவர் மற்றவருக்கு அடிமைப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த பந்தயத்தில், கத்ரு தோற்றாள். ஒப்பந்தப்படி கத்ருவும், அவளது குழந்தைகளான நாகங்களும் வினதாவிற்கு அடிமையாயின. வினதாவின் குழந்தையான கருடன், நாகங்களை துன்புறுத்தி வந்தது. வருந்திய நாகங்கள், வாசுகி என்ற பாம்பின் தலைமையில் குமாரதாரா என்ற நதியின் அருகிலிருந்த குகையில் வந்து தங்கின. அங்கிருந்தபடியே தங்களைக் காக்கும்படி அவை சிவனை வேண்டின. சிவபெருமான் அந்தப் பாம்புகள் முன்தோன்றி, 🦚எனது மகன் சுப்பிரமணியனிடம் உங்கள் குறைகளைக் கூறுங்கள். அவன் உங்களைக் காப்பாற்றுவான், என்றார். அதன்படி பாம்புகள் குமாரதாரா நதியில் நீராடி, சுப்ரமணியரை வழிபாடு செய்தன. 🦚 இதனால் மகிழ்ந்த சுப்பிரமணியர் நாகங்களைக் காப்பாற்றினார். இதற்கு நன்றிக்கடனாக வாசுகி பாம்பு, தனது ஐந்து தலைகளையும் விரித்து சுப்பிரமணியருக்கு குடையானது. இந்த நதி தற்போது கர்நாடகத்தில் ஓடுகிறது. அந்த நதிக்கரையில் சுப்பிரமணியருக்கு கோயில் எழுப்பப்பட்டது. 🦚ஊரின் பெயரே "சுப்ரமண்யா' என்பது தான்.🦚 சேவல் கொடி வைத்துள்ள இத்தல முருகன், "குக்குடத்வஜ கந்தஸ்வாமி' என அழைக்கப்படுகிறார். இக்கோயிலை ஒட்டி பள்ளூஸ் என்ற இடத்திலுள்ள குகையில், சிவபார்வதி அருள்பாலிக்கின்றனர். 🦚அதிசயத்தின் அடிப்படையில்: முருகன் தலை மீது ஐந்து தலை நாகருடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 👉திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 👉முகவரி: அருள்மிகு குக்கே சுப்ரமண்யா திருக்கோயில், குக்கே சுப்ரமண்யா-577 238 தட்ஷின கன்னடா மாவட்டம். பூஜை, மதியம் உச்சிகால பூஜை, மாலையில் சாயரட்சை பூஜை ஆகியவற்றை கேரள தந்திரிகள் செய்கின்றனர். மற்ற பூஜைகளை அர்ச்சகர்கள் செய்கின்றனர். கால பைரவர் சன்னதி உள்ளது. நாகர் பிரகார ஈசான மூலையில் உள்ளது. 🙏 நாக தோஷ பரிகார ஸ்தலம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரார்த்தனை நாகங்களின் தலைவியான வாசுகிக்கு முருகன் அபயம் அளித்துள்ளதால், ராகு, கேது தோஷத்தால் சிரமப்படுபவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபாடு செய்கிறார்கள். பிரம்மஹத்திதோஷம் (கொலை பாவம்), முன் ஜென்ம பாவங்கள், பித்ரு கடன் நிவர்த்தி தலமாக விளங்குகிறது. வயிற்று வலி, தோல் நோய், மன நோயால் பாதிக்ப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர். நம்பி சென்று வழிபட வேண்டிய அற்புதமான நாகத்தோடு கூடிய முருகன் கோவில்.. ஜாதகம் பார்க்க அணுகவும்.. லிங்கா ஸ்ரீ ஜோதிடம் பரிகார ஜோதிடர் ஆயில்யம் மைதிலி செல்: 7200 21 28 62. வாழ்க நலம் 🙌 ஓம் சரஹணபவ 🦚 #🕉️ஓம் முருகா #🙏கோவில் #🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠 #🙏ஆன்மீகம் #🕉️லிங்கா ஸ்ரீ ஆன்மிக தகவல்கள்🕉️
🕉️ஓம் முருகா - கண்ணுக்குதெரியாத கர்மபாதிப்புநீக்கும் வாசுகிமுருகன்  S} NGAA OTHID ] 8 @ ~ 98 8 8 கண்ணுக்குதெரியாத கர்மபாதிப்புநீக்கும் வாசுகிமுருகன்  S} NGAA OTHID ] 8 @ ~ 98 8 8 - ShareChat