ShareChat
click to see wallet page
search
"2026-ல் 220+ தொகுதிகளில் வெற்றி: கோட்டையை நோக்கி எடப்பாடியார்!" "தண்டையார்பேட்டையில் மகளிர் அணி சார்பில் 210 பெண்கள் பால்குடம் ஏந்தி பிரார்த்தனை ஊர்வலம்:" மற்றும் 500 பேருக்கு அன்னதானம்" வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது..! சென்னை, பிப். 06: தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணி 220-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அசாத்திய வெற்றி பெற்று, எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏற வேண்டி, வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகம் மற்றும் மாவட்ட மகளிரணி சார்பில் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. அரசியல் இலக்கும் ஆன்மீக பலமும் தமிழகத்தில் நிலவி வரும் தற்போதைய அரசியல் சூழலில், மக்களின் நலன் காக்கும் "தன்னிறைவான ஆட்சி" மீண்டும் மலர வேண்டும் என்பதே தொண்டர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. இதனை முன்னிறுத்தி, வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் பக்தி உணர்வுடன் கூடிய இந்த அரசியல் வெற்றிக்கான பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டது. கழக மகளிர் அணி செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான நாகரத்தினம் ரவிராஜன் ஏற்பாட்டில், 210-க்கும் மேற்பட்ட மகளிர் மஞ்சள் மற்றும் நீல நிற உடைகளில் அணிவகுத்தனர். பூ மாலையுடன் பால்குடம் ஏந்தி அவர்கள் ஊர்வலமாக வந்த காட்சி, தண்டையார்பேட்டை பகுதியை அ.தி.மு.க-வின் கோட்டையாக மாற்றிக் காட்டியது. சேனியம்மன் முதல் அங்காளம்மன் வரை பழமை வாய்ந்த சேனியம்மன் திருக்கோவிலில் வழிபாடு தொடங்கி, தண்டையார்பேட்டை மணிகூண்டு வழியாகச் சென்ற ஊர்வலம், அங்காளம்மன் திருக்கோவிலைச் சென்றடைந்தது. அங்கு அம்மனுக்குப் பாலாபிஷேகம் செய்யப்பட்டு, "எடப்பாடியார் தலைமையில் மீண்டும் பொற்கால ஆட்சி அமைய வேண்டும்" என உருக்கமாக நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டு 500-பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியைப் பகுதி செயலாளர்கள் எம்.என்.சீனிவாசபாலாஜி, ஆர்.நித்தியானந்தம், சந்தனசிவா ஆகியோர் முன்னின்று திறம்பட ஒருங்கிணைத்தனர். நிகழ்வின் போது தொண்டர்கள் எழுப்பிய "வெற்றி நிச்சயம், இது எடப்பாடியார் லட்சியம்" என்ற முழக்கங்கள் அப்பகுதி முழுவதும் எதிரொலித்தன. நிகழ்ச்சியில் நேதாஜி கணேசன், ஸ்டீல் ரவிசந்திரன், டி.டீ.ஜனார்த்தனன், ஐயப்பா எஸ்.வெங்கடேசன், ஜெஸ்டின் பிரேம்குமார், சா. முகேஷ், ஒ.ஏ.ரவிராஜன், இரா.முரளிமுருகன், லயன் ஈ.சண்முகவினாயகம், எஸ்.சுயம்பு, எஸ்.ஆர்.அன்பு, எம். சீனிவாசன், எல்.எஸ். மகேஷ்குமார், வி.எஸ்.புருஷோத்தமன், சிவகுமார், கர்ணன், மக்கள் கே.மகேந்திரன், பி.கோவிந்தராஜ், நரேஷ்குமார், ஏ.கே.சந்திரசேகர், மரக்கடை விஜி, இபி.சேகர், வழக்கறிஞர் ஏ.வினாயகமூர்த்தி, நாகூர்மீரான், ஆர்.வேல்முருகன், லிங்கேசன் கே.லோகு, அருண்பிரசாத், கே.எஸ். மூர்த்தி, டி.பிரபாகரன், நிர்மல்குமார், இளவரசன், ஏ.ஆர்.ஏழுமலை, குமார்ஜமுனா, அ.செல்வராஜ், பெரம்பூர் சேகர் லயன் ஜி.குமார், வி. பொன்முடி, சியான் செந்தில், எஸ்.முனுசாமி, செல்வி, எஸ்.எம்.கவிபாரதி, பா.சந்தோஷ், நமசிவாயம், கடல்ராஜன், தாமு (எ) தாமோதரன், உள்ளிட்ட பகுதி வட்ட பிற அணி செயலாளர்கள், பொறுப்பாளர்கள், வட்ட நிர்வாகிகள், பாக பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். @BABU AIADMK @அதிமுக தொண்டன் @மேலச்சேரி அதிமுக விஜய் @பாலேகுளி கோபி அதிமுக @கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக #✍️தமிழ் மன்றம் #✌️அ.தி.மு.க #🔷காங்கிரஸ் #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க
✍️தமிழ் மன்றம் - ShareChat